சேப்பாக்கத்தில் நிற்க சொன்ன சீமான்! மறுத்த மன்சூர் அலிகான்? – சீமான் விளக்கம்

புதன், 10 மார்ச் 2021 (12:19 IST)
நாம் தமிழர் கட்சியில் தொகுதி வழங்கவில்லை என மன்சூர் அலிக்கான் கட்சியிலிருந்து விலகியது குறித்து சீமான் விளக்கமளித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து வந்த நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் தனக்கு தொகுதி வழங்கவில்லை என நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி ”தமிழ் தேசிய புலிகள் கட்சி” என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து தனியார் செய்தி தொலைக்காட்சி பேட்டியில் பதிலளித்த சீமான், மன்சூர் அலிகான் புதுக்கோட்டை தொகுதி கேட்டதாகவும், ஆனால் அதற்கு ஏற்கனவே வேறு வேட்பாளர் அறிவிக்கப்பட்டதால் சேப்பாக்கத்தில் போட்டியிட வாய்ப்பளித்ததாகவும் கூறியுள்ளார்.

ஆனால் அந்த வாய்ப்பை மறுத்த மன்சூர் அலிகான் புதிய கட்சி தொடங்கிவிட்டு சீட் வழங்கவில்லை என கூறுவதாகவும் சீமான் விளக்கமளித்துள்ளார்.

எல்லாம் காட்டு

விசா இல்லாமல் தாய்லாந்து செல்லும் இந்தியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு... சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி...

தமிழக முதல்வர் - கேரள முதல்வர் இன்று சந்திப்பு.. இருமாநில நலன் குறித்து ஆலோசனை...

விஜய் ஆட்சியில் தமிழகத்திற்கு வரும் 2 கொரிய நிறுவனங்கள்.. தொழிற்சாலை அமைக்க 30 ஏக்கர் நிலம் வழங்கும் தமிழக அரசு...

தி.நகர் போல் மாற போகும் பெரம்பூர்.. முதல்வர் விஜய் தொகுதியில் ரூ.15 கோடி திட்டம்...

சென்னை - திருச்சி இனி 3 மணி நேரம் தான்.. வருகிறது பசுமைவழிச் சாலை.. கிளாம்பாக்கம் - மஹிந்திரா சிட்டி வரை மேம்பாலம்..

அடுத்த கட்டுரையில்
Show comments