Daily Horoscope

சேப்பாக்கத்தில் நிற்க சொன்ன சீமான்! மறுத்த மன்சூர் அலிகான்? – சீமான் விளக்கம்

Written By Prasanth Karthick
Updated: புதன், 10 மார்ச் 2021 (12:22 IST)
நாம் தமிழர் கட்சியில் தொகுதி வழங்கவில்லை என மன்சூர் அலிக்கான் கட்சியிலிருந்து விலகியது குறித்து சீமான் விளக்கமளித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து வந்த நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் தனக்கு தொகுதி வழங்கவில்லை என நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி ”தமிழ் தேசிய புலிகள் கட்சி” என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து தனியார் செய்தி தொலைக்காட்சி பேட்டியில் பதிலளித்த சீமான், மன்சூர் அலிகான் புதுக்கோட்டை தொகுதி கேட்டதாகவும், ஆனால் அதற்கு ஏற்கனவே வேறு வேட்பாளர் அறிவிக்கப்பட்டதால் சேப்பாக்கத்தில் போட்டியிட வாய்ப்பளித்ததாகவும் கூறியுள்ளார்.

ஆனால் அந்த வாய்ப்பை மறுத்த மன்சூர் அலிகான் புதிய கட்சி தொடங்கிவிட்டு சீட் வழங்கவில்லை என கூறுவதாகவும் சீமான் விளக்கமளித்துள்ளார்.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments