Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருமானவரி சோதனை பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் - சீமான்

Written By Sugapriya Prakash
Updated: புதன், 14 செப்டம்பர் 2022 (17:12 IST)
எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்டுள்ள வருமானவரி சோதனை பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே என சீமான் கண்டனம்.


இது குறித்து அவர் அறிக்கையில் வாயிலாக கூறியதாவது, எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை அரங்கேற்றியுள்ள பாஜக அரசின் எதேச்சதிக்காரச் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

தன்னாட்சி அமைப்புகளைத் தனது கைப்பாவையாக மாற்றி சனநாயக அமைப்புகளையும், இயக்கங்களையும் அச்சுறுத்தி, அழித்தொழிக்கும் முயற்சியில் மோடி அரசு தொடர்ந்து ஈடுபட்டுவருவது நாட்டினை பேரழிவினை நோக்கி இட்டுச்செல்லவே வழிவகுக்கும்.

இதுபோன்ற அதிகார அத்துமீறல்களைத் தொடர்வதை இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு நிறுத்திக்கொள்வதோடு, அதலபாதாளத்திற்குப் போயுள்ள நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைக்கவும், அதிகரித்துள்ள வேலையில்லா திண்டாடத்தைக் குறைக்கவும் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

இல்லையேல், இலங்கையில் மக்கள் புரட்சியினால், அந்நாட்டுக் கொடுங்கோன்மை ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்ட நிலைமையை இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி அரசாங்கமும் எதிர்கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை என எச்சரிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

திமுக ஆட்சியில் டாஸ்மாக்கின் நிழல் எம்.டி!.. யார் இந்த ரத்தீஷ்?

பழசெல்லாம் மறந்துபோச்சா!.. சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது!.. தயாநிதி மாறன் அட்டாக்!...

இடைத்தேர்தலுக்கு தயாராகும் அதிமுக.. விருப்பமனு குறித்த முக்கிய அறிவிப்பு..

முக ஸ்டாலின் மிசா கைதி இல்லை.. மிசா காலத்தில் வேறொரு வழக்கிற்காக கைதானவர்: அமைச்சர் நிர்மல் குமார்

திமுக எம்.எல்.ஏக்கள் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றம்.. சபாநாயகர் உத்தரவால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments