இன்னும் எவ்வளவு காலம் தான் ஆகும்: சாத்தான்குளம் வழக்கு குறித்து நீதிபதி கேள்வி!

திங்கள், 13 டிசம்பர் 2021 (18:26 IST)
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்த வழக்கு முடிவடைய இன்னும் எவ்வளவு காலம்தான் ஆகும் என நீதிபதி கேள்வி எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை மகன் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து குற்றம்சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் இந்த வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கில் விசாரணை எந்த நிலையில் உள்ளது எனவும், மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது
 
மேலும் விசாரணையை முழுவதும் நடத்தி முடிக்க எவ்வளவு காலம் ஆகும் என்பதை குறிப்பிட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 
 

எல்லாம் காட்டு

2016 தேர்தலில் இன்பதுரை வெற்றி செல்லாது: காலம் கடந்து வந்த தீர்ப்பால் என்ன பலன்?

இன்னொரு ராஜ்யசபா தொகுதி.. ஓசியில் பெற்ற காங்கிரஸ்.. 6 மாதங்களுக்கு முன் திமுகவிடம்.. இப்போது தவெகவிடம்..

ரிசர்வ் வங்கி தங்கத்தை விற்றுவிட்டதா? புளூம்பெர்க் எகனாமிக்ஸ் வெளியிட்ட ஆய்வு அறிக்கையால் பரபரப்பு..!

கர்நாடக மாநிலத்திலும் வந்தே மாதரம் முதலிடம்.. மாநில வாழ்த்துக்கு 3வது இடம்...!

பொறியியல் கல்லூரிகளில் 1000 போலி பேராசிரியர்கள்.. 5 வருடங்களாக தூங்கி கொண்டிருந்த திமுக அரசு..

அடுத்த கட்டுரையில்
Show comments