கந்த சஷ்டி அவதூறுக்கு பழி தீர்க்க பெரியார் மீது காவி சாயம்!!

சனி, 18 ஜூலை 2020 (08:13 IST)
பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவத்தில் சரண்டர்ரானவர் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 
 
சமீப காலமாக கடவுள் மறுப்பாளர்களுக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் வாக்குவாதங்கள் அதிகரித்துள்ளன. சமீபத்தில் யூட்யூப் சேனல் ஒன்றில் கந்தசஷ்டி கவசம் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து யுட்யூப் சேனல் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.  
 
இதனால் கடவுள் மறுப்பு பேசி வரும் திராவிட இயக்கங்களுக்கும், இறை நம்பிக்கையாளர்களுக்கும் சமூக வலைதளங்களில் மோதல் எழுந்துள்ளது.  இந்நிலையில் கோயம்புத்தூர் சுந்தராபுரத்தில் உள்ள பெரியார் சிலை மீது மர்ம நபர்கள் காவி சாயத்தை ஊற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசாரணை செய்து வந்த நிலையில் பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவத்தில் பாரத்சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் போலீஸாரிடம் தாமாக முன்வந்து சரணடைந்தார். 
 
இது தொடர்பாக அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாவது, கருப்பர் கூட்டம் யூ டியூப் சேனலில், இந்து கடவுள் முருகனை பற்றி இழிவாக பேசியதற்கு எதிர்ப்பை தெரிவிக்க பெரியார் சிலை மீது காவிச்சாயத்தை வீசியதாக கூறினார். மேலும், அருண் மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டு  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் பின்னர் சிறையில் அடைத்தனர்.

எல்லாம் காட்டு

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் யார் யார்? சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு

கரூர் நெரிசல் வழக்கு!.. திமுகவுக்கு மூக்குடைப்பு!.. உச்சநீதிமன்றம் கண்டிப்பு...

கவ்விப்பிடித்த சிங்கம்!.. பாசமாக தாடையை நீவி எஸ்கேப் ஆகிய நபர்!.. வைரல் வீடியோ!...

நாடு முழுவதும் 58 இன்ஜினியரிங் காலேஜை இழுத்து மூடியாச்சி!.. முக்கிய அறிவிப்பு...

உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அரசு இறுதிச்சடங்கு: இந்தியாவுக்கு மட்டும் நன்றி சொன்ன ஈரான்...

அடுத்த கட்டுரையில்
Show comments