Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு

Updated: வியாழன், 21 டிசம்பர் 2017 (09:27 IST)
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது. இதனையடுத்து அனைத்து வாக்குச்சாவடிகளிலும் துணை ராணுவத்தினர்களுடன் போலீசாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வாக்குப்பதிவின்போது எந்தவித முறைகேடும் நடந்துவிடக்கூடாது என்பதை கணக்கில் கொண்டும், அமைதியாக தேர்தலை நடத்தும் வகையிலும் வாக்குப்பதிவை தேர்தல் ஆணைய இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், வாக்குப்பதிவின் போது தகராறு செய்பவர்கள், வாக்களிப்பவர்களுக்கு இடைஞ்சலாக இருப்பவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவர் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டையே உலுக்கிய 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் தீர்ப்பும் இன்று வெளியாவதால் தீர்ப்புக்கு பின்னர் எந்தவிதமான அசம்பாவிதமும் நடந்துவிடாமல் இருக்கும் வகையிலும் போலீசார் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

சபரிமலை செல்லும் பக்தர்கள் மறுபரிசீலனை செய்யவும்.. தமிழக அரசு வலியுறுத்தல்..

மொரோக்காவில் இருந்து கடலில் நீந்தியே ஸ்பெயின் சென்ற 60,000 அகதிகள்.. அதிர்ச்சி தகவல்..

ஒரே ஒரு நாள் தான் டேட்டிங் செய்தேன்.. ஒரு மாத சம்பளம் போச்சு.. டேட்டிங் செயலியின் மோசடிகள்..

ஏன் எல்லோரும் Work From Home விரும்புகிறார்கள் தெரியும்.. அடுக்கடுக்கான காரணங்களை கூறும் ஸ்நேகா..

இந்தியா நல்லா இருக்குன்னா எதுக்கு துபாய் போய் செட்டில் ஆனீங்க.. நடிகர் மாதவனை கேள்வி கேட்கும் ராஜ் தாக்கரே..

அடுத்த கட்டுரையில்
Show comments