கருத்து கணிப்பு அல்ல.. கருத்து திணிப்பு.. அதிமுக 25 தொகுதிகளில் வெற்றி பெறும்: ஆர்பி உதயகுமார்..!

Mahendran
திங்கள், 3 ஜூன் 2024 (16:07 IST)
நேற்று முன்தினம் வெளியானது கருத்து கணிப்பு அல்ல என்றும் கருத்து திணிப்பு என்றும் கூறிய முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தமிழகத்தில் அதிமுக 25 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
 
பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியான கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் திமுக 36 முதல் 39 தொகுதிகள் வரை வெற்றி பெறும் என்று பல ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன. 
 
குறிப்பாக அதிமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லாமல் போகலாம் என்றும் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது அதிமுக தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த நிலையில் கருத்துக்கணிப்பு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கருத்துக்கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்புதான் நடக்கிறது என்றும் தமிழகத்தில் அதிமுக 25 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றி பெறும் என்றும் கூறியுள்ளார். அவரது நம்பிக்கையை சரியாக இருக்குமா என்பதை நாளை வரை பொறுத்து இருந்து பார்ப்போம். 
 
Edited by Mahendran
 

எல்லாம் காட்டு

ஒரு பக்கம் தொழிலாளர் ஏற்றி சென்ற இரண்டு பேருந்துகள் மண்ணில் புதைந்து போனது மேலும் சில தொழிலாளர்களும் நிலச்சரிக்கை சுற்றி இருக்கிறார்கள் அவர்கள் நிற்கும் படி நடைபெற்று வருகிறது அந்த பகுதியில் நிலை தேர்

தவெக அரசை கவிழ்க்க முயற்சித்த திருச்சி நரேஷ் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்.. பரபரப்பு தகவல்...

தவெக எம்.எல்.ஏக்களிடம் பேரம்!.. ஆவணங்கள், பணம் பறிமுதல்!.. வசமாக சிக்கிய செந்தில் பாலாஜி தம்பி!..

ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு.. ரிஜிஸ்டர் அலுவலகம் வராமலே பத்திரம் பதியலாம்...

திமுக ஆட்சியில் 60000 டயர்கள் வாங்க போடப்பட்ட டெண்டர்.. தவெக அரசு அதிரடி ரத்து...

அடுத்த கட்டுரையில்
Show comments