இங்கிலாந்து இளவரசருக்கே கொரோனாவாம்! உஷாரா இருங்க! – ராமதாஸ் அறிவுரை!

வியாழன், 23 ஏப்ரல் 2020 (15:10 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அவசியமின்றி வெளியே வரும் நபர்களை போலீஸார் கைது செய்து பின்னர் விடுதலை செய்து வருகின்றனர். இதுவரை தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மக்கள் தேவையின்றி வெளியே திரிவதை தவிர்க்குமாறு அடிக்கடி ட்விட்டரில் தெரிவித்து வரும் பாமக நிறுவனர் ராமதாஸ் “ஊரடங்கை உதாசீனப்படுத்தி ஊர்சுற்றும் இளைஞர்களுக்கும், மக்களுக்கும் ஓர் வேண்டுகோள்: உலகையே ஒரு குடையின்கீழ் கொண்டு வந்து ஆண்ட இங்கிலாந்தின் இளவரசரும், பிரதமரும் கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டு போராடி உயிர்பிழைத்துள்ளனர். இதை அனைவரும் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்! “ என்று தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

பழனி கோயில் நில விவகாரம்: திண்டுக்கல் மாவட்ட பதிவாளர் அதிரடி சஸ்பெண்ட்!

குழந்தைகள் மற்றும் பாராசிட்டமால் மருந்துகளில் ஆல்கஹால்? தமிழக சுகாதாரத் துறை விளக்கம்!

தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறந்து விட முடியாது: கர்நாடகா மீண்டும் திட்டவட்டம்!

நாடாளுமன்றத்தில் ஸ்மார்ட் வாட்ச் மற்றும் சாதனங்களுக்கு தடை: மக்களவை செயலகம் அதிரடி அறிவுறுத்தல்!

லஞ்சம் வாங்கிய விவகாரம்!.. ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி கைது!...

அடுத்த கட்டுரையில்
Show comments