இன்று காலை 10 மணிக்குள் எத்தனை மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்..!

Written By Siva
Updated: செவ்வாய், 10 டிசம்பர் 2024 (07:32 IST)
இன்று காலை 10 மணிக்குள் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக இருக்கும் நிலையில், நாளையும் மறுநாளும் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கன மழை வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
மேற்கண்ட 5 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
 
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

உறுதி அளித்தால் உண்ணாவிரதத்தைக் கைவிடத் தயாராக இருக்கிறேன்- சோனம் வாங்சுக்

ஜெயில் ஜாலியா இருக்கு!.. விரைவில் ஆட்சி மாறும்!. மார்க்கண்டேயன் பேட்டி!...

ஈரானுக்கு எதிரான போரில் 3.6 லட்சம் கோடி செலவு!.. அமெரிக்கா அறிவிப்பு..

இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ள அசத்தல் போட்டி.. வெற்றி பெற்றால் ரூ.75,000 பரிசு...

தமிழகத்துக்கு வரும் ராஜேஷ் லக்கானி!. செந்தில் பாலாஜிக்கு சிக்கல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments