சென்னையில் அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகும் மழை.. வானிலை எச்சரிக்கை..!

புதன், 27 செப்டம்பர் 2023 (17:10 IST)
சென்னையில் இன்னும் மூன்று மணி நேரத்தில்  மிதமான மழை முதல் கன மழை வரை செய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
கடந்த சில நாட்களாகவே கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
குறிப்பாக இன்று காலை  தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியிட்டுள்ள வானிலை அறிவிப்பில் சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கன மழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
சென்னையில் உள்ள பல பகுதிகளில் பரவலான இடங்களில் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளதால் சென்னை மக்கள் எச்சரிக்கையுடன் இருந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

100 கோடி நிலம் விவகாரம்!.. எல்லாமே பொய்... அமைச்சர் ரமேஷ் விளக்கம்!..

ஆட்சிக்கு ஆதரவாக திரையுலகினரை வைத்து விளம்பரம்!.. தவெக போடும் ஸ்கெட்ச்!..

பெண்கள் அந்தரங்க வீடியோ!.. நாகர்கோவில் காசிக்கு வாழ்நாள் சிறை உறுதி!..

கல்யாணத்தை நிறுத்த மொட்டையா?!.. இளம்பெண்ணை திட்டி தீர்த்த நெட்டிசன்ஸ்!.. வீடியோ உள்ளே

விசாரணைக்கு வரேன்!. ஆனா அரெஸ்ட் பண்ணக்கூடாது!.. காவல்துறைக்கு செந்தில் பாலாஜி கடிதம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments