சென்னையில் அடுத்த 3 மணி நேரத்தில் கொட்டப்போகும் மழை.. வானிலை எச்சரிக்கை..!

புதன், 27 செப்டம்பர் 2023 (17:10 IST)
சென்னையில் இன்னும் மூன்று மணி நேரத்தில்  மிதமான மழை முதல் கன மழை வரை செய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
கடந்த சில நாட்களாகவே கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
குறிப்பாக இன்று காலை  தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியிட்டுள்ள வானிலை அறிவிப்பில் சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் கன மழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
சென்னையில் உள்ள பல பகுதிகளில் பரவலான இடங்களில் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளதால் சென்னை மக்கள் எச்சரிக்கையுடன் இருந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

நாங்க ஆட்சியை கவுக்க மாட்டோம்!.. பயப்பட வேண்டாம்!.. தவெகவுக்கு திருமா அட்வைஸ்!..

நாங்கெல்லாம் விஜய்க்குதான் ஓட்டு போட்டோம்!.. ஆனா!.. டாஸ்மாக் ஊழியர்கள் புலம்பல்!...

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்.எல்.ஏக்கள்!.. தவெக போடும் கணக்கு!...

6 மாசம் கம்முன்னு இருப்போம்னு சொல்லிட்டு இப்ப ஏன் கத்துறீங்க!.. செங்கோட்டையன் பேட்டி!..

தமிழகம் போலவே மேற்குவங்கத்திலும்... பள்ளி, கல்லூரி, கோவில்களுக்கு அருகே மதுக்கடைகள் தடை.. முதல்வர் சுவேந்து அதிகாரி அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments