சென்னையில் விடிய விடிய கொட்டிய மழை: நீர் தேங்கியதால் மக்கள் அவதி

Written By Arun Prasath
Updated: வியாழன், 19 செப்டம்பர் 2019 (11:05 IST)
சென்னையில் விடிய விடிய கொட்டிய மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது.

சென்னையில் நேற்று இரவு முழுவதும் கனமழை கொட்டியது. விடிய விடிய பெய்த மழையால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பணிக்கு செல்பவர்களும் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் மிகவும் சிரமப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக சென்னை மண்ணடி பகுதியில் பெய்த கனமழையால் சாலைகளில் முட்டியளவு நீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். மேலும் சென்னை ஐஸ் அவுஸ் சாலையில் சில உயரத்திற்கு நீர் தேங்கியுள்ளதால், அடைப்பை நீக்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது லேசான தூரல் பெய்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னை மட்டுமல்லாது திருவள்ளூர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

நீட் வினாத்தாள் கசிவில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் சிறை.. ரூ.10 கோடி அபராதம்: பிரதமர் மோடி

இன்னொரு அதிமுக விக்கெட் விழுந்தது.. சிங்கை ராமச்சந்திரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு..!

இனி பிளிகார்டில் சாப்பாடும் கிடைக்கும்.. தனி செயலி அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்...!

நண்பர்கள் கிண்டல்!.. 10 லட்சம் செலவு பண்ணி தாடி மாற்று அறுவை சிகிச்சை செய்த நபர்!...

Swiggy, Zomato மூலம் வரும் இலவச உணவுகள்!.. டெல்லி போராட்டத்தில் மனித நேயம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments