ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை: முதல்வர் அமைத்த 6 பேர் கொண்ட குழு!

வெள்ளி, 24 டிசம்பர் 2021 (07:13 IST)
தமிழக சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய முதலமைச்சர் முக ஸ்டாலின் 6 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே பல்வேறு கட்சிகளில் இருந்து கோரிக்கை வந்துள்ளது. 
 
இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் ஓய்வுபெற்ற நீதிபதி ஆதிநாதன் என்பவர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்துள்ளது.
 
இந்த குழு நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகளை யார் யாரை விடுதலை செய்யலாம் என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை முதலமைச்சருக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த அறிக்கையின் அடிப்படையில் நன்னடத்தை அடிப்படையில் ஆயுள் தண்டனை கைதிகள் சிலர் முன்கூட்டியே விடுதலை செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
 

எல்லாம் காட்டு

இன்று இரவு வானில் ஒரு அரிய காட்சி.. புளூ மூனை காணத்தவறாதீர்கள்...

5 வருடங்களாக துரைமுருகன் பூட்டி வைத்திருந்த எம்.எல்.ஏ அலுவலம்.. இன்று சுறுசுறுப்பாக புத்தம் புது பொலிவுடன்.. இதுதாண்டா மாற்றம்..

8 பேரை சரமாரியாக வெட்டிய 6 பேர் கும்பல்.. 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் அரெஸ்ட்.. ட்ரோன் தொழில்நுட்பம்.. துப்பாக்கி சூடு.. போலீஸ் அதிரடி...

அடிக்கடி வந்து சோதனை செய்வேன்: அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பத்திரப்பதிவு துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்

திருவள்ளுவரின் காவி உடை.. நடிகை கஸ்தூரியின் சாட்டையடி பதிவு:

அடுத்த கட்டுரையில்
Show comments