Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு தபால் வாக்கு: கோரிக்கை நிறைவேறுமா?

Written By siva
Updated: திங்கள், 29 மார்ச் 2021 (12:52 IST)
80 வயதுக்கு மேலானவர்கள் மற்றும் தேர்தல் பணிகளில் இருப்பவர்களுக்கு மட்டும் தபால் வாக்குகள் வழங்க தேர்தல் ஆணையம் அனுமதி இருந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தபால் வாக்குகள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது 
 
கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு தபால் வாக்கு வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு பெருமளவு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கொரோனா நோய் பாதித்தவர்கள் வாக்குப் போடும் போது அவர்கள் வாக்களிக்க தயங்குவார்கள் என்னும் என்றும் அதனால் கடைசி நேரத்தில் வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வருவதை தவிர்க்க வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் வாக்குபதிவு குறைய வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர் 
 
தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாகவும் இது குறித்து இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிய வருகிறது

எல்லாம் காட்டு

தமிழ்நாட்டில் பைக் டாக்சிக்கு அனுமதி இல்லை!.. தமிழக அரசு அதிரடி...

அதிமுகவின் இன்னொரு விக்கெட் காலி.. தவெகவில் இணைந்தார் வடசென்னை ராஜேஷ்...

பல ஆண்டுகளாக ரூ.8.77 கோடி வாடகை கொடுக்கமால் டிமிக்கி கொடுத்த நிறுவனம்.. 2 மாதத்தில் வசூல் செய்த தவெக அரசு..

அரசு அதிகாரிகளின் பணி உயர்வு விவகாரம்.. முதல்வர் விஜய் நேரடி ஒப்புதல் தேவை.. அதிரடி உத்தரவு..

ஜியோவின் 365 நாட்கள் திட்டம்.. 912 ஜிபி-க்கும் அதிகமான டேட்டா.. அன்லிமிடெட் அழைப்புகள்..

அடுத்த கட்டுரையில்
Show comments