Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடு - மக்கள் அதிருப்தி!

Written By Sugapriya Prakash
Updated: ஞாயிறு, 9 ஜனவரி 2022 (11:08 IST)
பொங்கல் பரிசான 21 பொருட்கள் எடை குறைவாகவும் பாக்கெட் பாதிப்படைந்து இருப்பதாகவும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

 
தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் பரிசாக 22 பொருட்கள் அரிசி அட்டைதாரர்களுக்கும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் இருக்கும் குடும்பத்தினர்களுக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 
 
தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் எடை குறைவாகவும் பாக்கெட் பாதிப்படைந்து இருப்பதாகவும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 
 
முந்திரி ஏலக்காய் திராட்சை பொருட்களில் முந்திரி 50 கிராம், திராட்சை 50 கிராம், ஏலக்காய் 10 கிராம் இருக்க வேண்டும். ஆனால், முந்திரி வெறும் 10 கிராம் திராட்சை 15 கிராம் ஏலக்காய் 2 கிராம் தான் இருக்கிறதாம். இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் குறைகள் தீர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எல்லாம் காட்டு

இன்று சட்டசபையில் ஒரு வார்த்தை கூட பேசாத உதயநிதி!.. என்னாச்சி?...

விவசாயிகளை வாழ வைக்கும் முதல்வர் விஜய்.. இது எதிர்க்கட்சிகளுக்கு புரியவில்லை: செங்கோட்டையன்

தவெக அரசை வைத்து காங்கிரஸ் நடத்தும் நாடகம் தான் Delimitation.. தயாநிதி மாறன் எக்ஸ் பதிவு..

அறங்காவலர்களை தேர்வு செய்யும் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி!.. தமிழக அரசு அறிவிப்பு..

மத்திய அரசு இணையதளத்தில் ரக்சிதா போட்டோ!.. ஒரே அக்கப்போரு!....

அடுத்த கட்டுரையில்
Show comments