திங்கள், 7 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 14 செப்டம்பர் 2016 (15:46 IST)

காவிரி விவகாரம் : முழு அடைப்பு போராட்டத்திற்கு பா.ம.க. ஆதரவு

காவிரி நீர் பிரச்சனையில், கர்நாடகாவில் உள்ள தமிழர்கள தாக்கப்படுவதை கண்டித்து வருகிற 16ம் தேதி, தமிழகத்தில் நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளது.


 

 
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ள அறிக்கையில்க் கூறியிருப்பதாவது:
 
“காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு துரோகம் இழைக்கப்படுவதையும், கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதையும் கண்டித்து நாளை மறுநாள் 16-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த உழவர் அமைப்புகள், வணிகர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இப்போராட்டத்திற்கு பா.ம.க.வின் ஆதரவை அந்த அமைப்புகள் கோரியுள்ளன.
 
போராட்டத்திற்காக முன்வைக்கப்படும் கோரிக்கைகளை வலியுறுத்தி தான் பாட்டாளி மக்கள் கட்சி நீண்ட நாட்களாக போராடி வருகிறது என்பதாலும், தமிழகத்தின் நலன் காப்பதற்காக நடத்தப்படுகிறது என்பதாலும் இந்த முழு அடைப்புப் போராட்டத்தை ஆதரிக்க பாட்டாளி மக்கள் கட்சி தீர்மானித்துள்ளது. அதேபோல், மற்ற அனைத்துத் தரப்பினரும் இப்போராட்டத்தை ஆதரிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” 
 
என்று அவர் குறிப்பிட்டுள்ளர்.