Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட்: தேர்வுத்துறை இயக்ககம் அறிவிப்பு!

Written By Mahendran
Updated: செவ்வாய், 3 ஜனவரி 2023 (14:32 IST)
பிளஸ் டூ மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இயக்கம் சற்றுமுன் தெரிவித்துள்ளது. 
 
நாளை முதல் தமிழ்நாடு அரசு தேர்வுத்துறை இயக்ககத்தின் அதிகாரபூர்வ இணையதளமான https://dge1.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பிளஸ் டூ மாணவர்கள் பிற்பகல் 2 மணி முதல் ஹால்டிக்கெட்டுக்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பிளஸ் 2 மாணவர்களுக்கு அடுத்த மாதம் செய்முறை தேர்வு மற்றும் மார்ச் மாதம் எழுத்து தேர்வு தொடங்க இருப்பதை அறிந்து ஜனவரி 4 முதல் அதாவது நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
பிளஸ்1 மாணவர்களுக்கு மார்ச் 15ம் தேதி முதல் ஏப்ரல் ஐந்தாம் தேதி வரையிலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரையிலும் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது என்பது தெரிந்ததே.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

தமிழ்நாட்டில் பைக் டாக்சிக்கு அனுமதி இல்லை!.. தமிழக அரசு அதிரடி...

அதிமுகவின் இன்னொரு விக்கெட் காலி.. தவெகவில் இணைந்தார் வடசென்னை ராஜேஷ்...

பல ஆண்டுகளாக ரூ.8.77 கோடி வாடகை கொடுக்கமால் டிமிக்கி கொடுத்த நிறுவனம்.. 2 மாதத்தில் வசூல் செய்த தவெக அரசு..

அரசு அதிகாரிகளின் பணி உயர்வு விவகாரம்.. முதல்வர் விஜய் நேரடி ஒப்புதல் தேவை.. அதிரடி உத்தரவு..

ஜியோவின் 365 நாட்கள் திட்டம்.. 912 ஜிபி-க்கும் அதிகமான டேட்டா.. அன்லிமிடெட் அழைப்புகள்..

அடுத்த கட்டுரையில்
Show comments