பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு உண்டா? அண்ணா பல்கலை ஆலோசனை

வியாழன், 25 ஜூன் 2020 (07:26 IST)
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 10ஆம் வகுப்பு தேர்வு உள்பட பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் கலைக்கல்லூரி மாணவர்களின் தேர்வுகளை ரத்து செய்ய யுஜிசி பரிந்துரை செய்துள்ளது. 
 
இந்த நிலையில் பொறியியல் கல்லூரிகளின் முதலாம் ஆண்டு,  இரண்டாம் ஆண்டு, மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், கொரோனோ தீவிரம் குறைந்தபின் அரசின் ஆலோசனை மற்றும் ஒப்புதல் பெற்று தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அண்ணா பல்கலை கூறியுள்ளது
 
ஆனால் அதே நேரத்தில் பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு தேர்வு வைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் ஜூலை இறுதியில் பொறியியல் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது
 
பொறியியல் இறுதியாண்டு மாணவர்கள் புதிதாக நிறுவனங்களில் பணிக்கு  சேர வேண்டிய நிலை இருப்பதால் அவர்களுக்கு தேர்வு வைக்க வேண்டியதன் அவசியம் கருதி ஜூலை இறுதியில் தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இறுதியாண்டு மாணவர்கள்  தங்கள் வீடுகளில் இருந்தே ஆன்லைன் முறையில் தேர்வை எழுதுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அண்ணா பல்கலைகழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது
 

எல்லாம் காட்டு

செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!.. திடீர்னு என்னாச்சி?..

திமுகவின் வன்மம் இதுதான்!.. தவெக ஆட்சி தொடரும்!.. மாணிக்கம் தாகூர் பேட்டி...

இனிமேல் ஷாப்பிங் போகும்போது பையை தூக்கிட்டு கஷ்டப்பட வேண்டாம்.. 149 ரூபாய் கொடுத்தால் போதும்.. கேர்மேன் வந்துட்டாரு...!

தவெக ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்: முக ஸ்டாலின்.. எந்த ஆட்சிக்கும் 6 மாதங்கள் டைம் கொடுக்கனும், அதற்குள் விமர்சிக்க கூடாது: வைகோ.. யார் முதிர்ச்சியான அரசியல்வாதி?

8000 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதியா? தமிழக சுகாதாரத்துறை அளித்த விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments