நிர்மலாதேவி விவகாரம்: ஆளுனர் அமைத்த குழுவுக்கு தடையில்லை: நீதிமன்றம் அதிரடி

புதன், 9 மே 2018 (13:06 IST)
அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கை சிபிசிஐடி மற்றும் ஆளுனர் அமைத்த சந்தானம் தலைமையிலான குழு ஆகிய இரண்டு குழுக்கள் ஒரே நேரத்தில் விசாரணை செய்து கொண்டிருக்கின்றது.
 
இந்த நிலையில் ஆளுனர் அமைத்த சந்தானம் தலைமையிலான குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மதுரை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
 
இந்த மனுவை இன்று விசாரணை செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, நிர்மலா விவகாரத்தில் ஆளுநர் நியமித்துள்ள சந்தானம் குழுவுக்கு தடைவிதிக்க முடியாது என்றும் பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிறப்பித்த உத்தரவில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து சந்தானம் தலைமையிலான குழு தங்கள் விசாரணையை தொடர எந்தவித தடையும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

எல்லாம் காட்டு

விஜயை நேரில் சந்தித்து 6 கோரிக்கைகள் வைத்த கமல்!.. முக்கிய அப்டேட்...

சிறுமியின் பேச்சைக்கேட்ட முதல்வர் விஜய்!.. உடனே மாத்திட்டாரு!...

மூனெழுத்து இட்லி நடிகைதான் எல்லாத்துக்கும் காரணம்!.. ரவி மோகன் கண்ணீர்..

யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி?.. எப்போது வெளியாகும் பட்டியல்?.. பரபர அப்டேட்..

7 நிமிடத்தில் புற்றுநோய் சிகிச்சை!.. ஒரு டோஸ் விலை என்ன தெரியுமா?...

அடுத்த கட்டுரையில்
Show comments