ராஜினாமா செய்கிறாரா நெல்லை மேயர்? திமுக கவுன்சிலர்கள் மத்தியில் பரபரப்பு..!

Siva
செவ்வாய், 2 ஜூலை 2024 (12:31 IST)
நெல்லை மேயர் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்படும் நிலையில் திமுக கவுன்சிலர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
கடந்த சில நாட்களாக நெல்லை மேயருக்கும் திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு வருவதாகவும் ஒவ்வொரு மாதமும் மாநகராட்சி கூட்டம் ஏற்பாடு செய்யும்போது திமுக கவுன்சிலர்கள் போதிய அளவில் கலந்து கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.
 
 இந்த நிலையில் திடீரென நெல்லை மேயர் சரவணன் சென்னை சென்றுள்ளதாகவும் அங்கு அவர் திமுக தலைமையிடம் தனது பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாகவும் அதற்கான கடிதத்தை வழங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
 இந்த தகவல் இன்னும் திமுக தலைமை தரப்பிலிருந்து உறுதி செய்யப்படாத நிலையில் சமூக வலைதளங்களில் மட்டும் இந்த தகவல் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
உண்மையிலேயே நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா செய்து விட்டாரா என்பது இன்னும் சில மணி நேரத்தில் தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது. இதனால் நெல்லை திமுக கவுசர் அவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

தத்துவம் இல்லாத அரசியல்!.. உங்களை கொன்னு கூட அவன் ஜெயிப்பான்!.. இளவரசு யாரை சொல்றாரு!..

தவெகவுடன் கூட்டணி!.. பக்கா பிளான் போடும் என்.ஆர்.ரங்கசாமி!.. நடப்பது என்ன?..

திமுகவில் இணைய ரூ.500 கோடி பேரம்: ஆடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு தவெக எம்எல்ஏ அதிரடி புகார்!

போதைப்பொருளுக்கு எதிரான சிறப்பு வேட்டை: மூன்றே நாட்களில் 621 பேர் கைது! 296 கிலோ கஞ்சா பறிமுதல்..

தமிழக காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்கு போட்ட கேரள காங்கிரஸ் அரசு.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments