நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசத்தை நீட்டித்தது தேசிய தேர்வுகள் முகமை.. கடைசி தேதி என்ன?

Siva
ஞாயிறு, 10 மார்ச் 2024 (11:21 IST)
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 9ஆம் தேதி கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மார்ச் 16ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது 
 
2024-25 கல்வி ஆண்டு நீட் தேர்வு தமிழ் உள்பட 13 மொழிகளில் மே ஐந்தாம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கிய நிலையில் மார்ச் 9ஆம் தேதி நள்ளிரவு 11:55 என்ன விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் நீட் நுழைவு தேர்வுக்கான விண்ணப்ப தேதி மார்ச் 16ஆம் தேதி இரவு 10.50 மணி வரை நீட்டிக்கபடுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் இரவு 11.50 மணி நீட் தேர்வுக்கான கட்டணத்தை செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
நீட் தேர்வுக்கு விண்ணப்பதிவு மாணவர்கள் neet.nta.nic.in  என்ற இணையதளம் வழியாக மார்ச் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. விண்ணப்பத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் https://nta.ac.in/ என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது neet@nta.ac.in என்ற இமெயில் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.
 
Edited by Siva
 

எல்லாம் காட்டு

சுடுகாட்டில் 3 மாசம் படுத்திருந்தேன்!.. ராதன் பண்டிட் பகீர் பேட்டி....

பாஜகவை எதிர்த்த திமுக!.. என்ன செய்யப்போகிறார் விஜய்?.. தவெக பிளான் என்ன?...

பழனிச்சாமியை விஜய் ஏன் சந்திக்கவில்லை?!.. அமைச்சர் சி.டி நிர்மல் குமார் விளக்கம்..

தவெக அமைச்சரவையில் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்.. 50 வருடங்களுக்கு பின் அமைச்சரவையில் பங்கேற்பு..!

இதுதாண்டா மக்களாட்சி.. நெல் கொள்முதல் விவகாரம்.. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் அதிரடி எச்சரிக்கை - அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி!

அடுத்த கட்டுரையில்
Show comments