Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகர்கோவில் பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் கைது! என்ன காரணம்?

Written By Mahendran
Updated: செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (17:17 IST)
நாகர்கோவிலை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தர்மராஜ் என்பவர் திடீரென கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக மாவட்ட செயலாளர் தர்மராஜ் என்பவர் நாகர்கோவிலில் காங்கிரஸ் தொண்டர்களை தாக்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவருடன் கன்னியாகுமரி மாவட்ட பாஜக செயலாளர் சொக்கலிங்கம் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
பாஜக அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியதை அடுத்து இரு கட்சி தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் இந்த மோதலில் பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் மாவட்ட செயலாளர் சொக்கலிங்கம் உள்பட பலர் ஈடுபட்டதை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 53 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளனர். நாகர்கோவில் பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

11 ஆயிரம் கோடி ஒப்பந்தம்!.. 7 ஆயிரம் பேருக்கு வேலை!. லண்டனில் கலக்கும் விஜய்!..

செயற்கை சூரியன் தயாரிக்கும் முயற்சியில் இந்திய விஞ்ஞானிகள்.. இது நடந்துவிட்டால் என்ன ஆகும்?

விஜய் என்னை மீட் பண்ணாம லண்டன் போயிட்டாருன்னு யார் சொன்னா?!.. மலேசிய பிரதமர் பேட்டி!..

ஐடி வேலை இனி வேண்டாம்.. உபேர் கார் ஓட்டினால் வாரம் ரூ.46000 வருமானம்.. மாற்றி யோசிக்கும் ஜென் சி

காவிரி படுகை பகுதியில் ஐந்து புதிய ஹைட்ரோகார்பன் கிணறுகள்.. விவசாயிகள் கடும் எதிர்ப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments