நாகர்கோவில் பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் கைது! என்ன காரணம்?

Written By Mahendran
Updated: செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (17:17 IST)
நாகர்கோவிலை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் தர்மராஜ் என்பவர் திடீரென கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக மாவட்ட செயலாளர் தர்மராஜ் என்பவர் நாகர்கோவிலில் காங்கிரஸ் தொண்டர்களை தாக்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவருடன் கன்னியாகுமரி மாவட்ட பாஜக செயலாளர் சொக்கலிங்கம் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
பாஜக அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சி போராட்டம் நடத்தியதை அடுத்து இரு கட்சி தொண்டர்களுக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் இந்த மோதலில் பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் மாவட்ட செயலாளர் சொக்கலிங்கம் உள்பட பலர் ஈடுபட்டதை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 53 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளனர். நாகர்கோவில் பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

டெல்லியில் போராடும் மாணவர்கள்!. ரூ.67,734க்கு பீட்சா அனுப்பிய இளைஞர்!.. நெகிழ்ச்சி செய்தி!..

வீட்டின் முன்பு மாந்திரீக பூஜை!.. ஜிபி முத்து மீது தாக்குதல்!...

நாளை வரை அவகாசம் கேட்ட பாஜக!.. தர்மேந்திர பிரதான் பதவி பறிக்கப்படுமா?...

லண்டன் ஓட்டலில் மர்மமாக உயிரிழந்த சவுதி இளவரசர்.. 8 மாதம் கழித்து வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்..

சினிமா பாத்து சீன் போடுறது இல்ல ஆட்சி!.. தவெகவை விளாசிய பிரேமலதா!..

அடுத்த கட்டுரையில்
Show comments