Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்தூட் பைனான்ஸ் கொள்ளை: 6 பேர் கைது !!

Written By Sugapriya Prakash
Updated: சனி, 23 ஜனவரி 2021 (12:32 IST)
ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.12 கோடி நகைகளை கொள்ளையடித்த 6 பேர் கைது. 

 
ஒசூர் முத்தூட் நிதி நிறுவனத்தில் 25 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மதியம் நடைப்பெற்ற இந்த கொள்ளை சம்பவத்தில் உடனடியாக சிசிடிவி மூலம் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கினர். 
 
விசாரணையின் முடிவில் கொள்ளையடித்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.  கைது செய்யப்பட்வர்களில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த 6 பேரிடமிருந்து ரூ.12 கோடி நகைகள், 7 துப்பாக்கிகள், 2 கத்தி பறிமுதல் செய்துள்ளனர். 
 
இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாடு காவல்துறையினரின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்.  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் முத்தூட் நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற கொள்ளையில் திருடு போன 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ தங்கத்தையும், கொள்ளையர்களையும் துரிதமாக செயல்பட்டு 18 மணி நேரத்தில் பிடித்த தமிழ்நாடு காவல்துறையினருக்கு, குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறைக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். 

எல்லாம் காட்டு

திமுக பத்தி எல்லாத்தையும் சொன்னா தாங்கமாட்டீங்க!.. சட்டசபையில் ஆதவ் அர்ஜுனா ஆவேசம்!..

இதோட முடியல!.. நேபாளத்திற்கு இன்னொரு ஆபத்து இருக்கு!. சீனா எச்சரிக்கை!..

நேபாளம் வெள்ளம்!.. பனிப்பாறை உடைந்ததே காரணம்!.. சேட்டிலைட் மூலம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிப்பு!..

அமைச்சர் ராஜ்மோகன் கூறிய பிச்சை என்ற வார்த்தை.. திமுக எம்.எல்.ஏக்கள் கொந்தளிப்பு..

திடீரென இருக்கை மாறிய முதல்வர் விஜய்.. முதலமைச்சருக்கான தனி இருக்கையில் அமராதது ஏன்?

அடுத்த கட்டுரையில்
Show comments