சவால் விட்ட அண்ணாமலை! ஏற்றுக் கொண்ட திமுக எம்.பி! – காத்திருக்கு காரசார விவாதம்!

வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (13:24 IST)
திமுகவினர் என்னுடன் விவாதிக்க தயாரா என பாஜக அண்ணாமலை விடுத்த சவாலை திமுக எம்.பி செந்தில் குமார் ஏற்றுக் கொண்டுள்ளார்.

தமிழக பாஜகவில் இணைந்ததில் இருந்து திராவிட கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார். அவரது பேச்சுக்கு திமுகவினர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாஜக துணை தலைவராக பொறுப்பேற்றுள்ள நிலையில் தொடர்ந்து திமுகவை விமர்சித்து வரும் அண்ணாமலை தன்னுடன் திமுகவினர் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என சவால் விடுத்திருந்தார்.

இந்நிலையில் அண்ணாமலையின் சவாலை ஏற்றுக்கொண்டுள்ள திமுக எம்பி செந்தில் குமார் இருவருக்கும் இடையேயான விவாதத்தை செய்தி சேனல்கள் யாராவது ஒளிபரப்ப ஏற்பாடு செய்தால் வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இருவருக்கும் இடையேயான விவாதத்தை காண இரு தரப்பினரும் ஆவலுடன் காத்துள்ளனர்.

எல்லாம் காட்டு

எங்கள் டைமை வேஸ்ட் செய்யாதீர்கள்.. டெல்லி மாணவர்கள் மீதான தடியடி வழக்கில் நீதிமன்றம் கண்டிப்பு..

நான் ஏன் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்? டைம் வேஸ்ட்.. நீட் தேர்வில் 2ஆம் இடத்தை பிடித்த மாணவர்...

பிரதமர் மோடியின் அடுத்தடுத்த விக்கெட்டுக்கள்.. மகளுடன் பிரதமரை சந்தித்த சரத்பவார்...

சிறையில் பிரியங்கா காந்தியை பார்க்க வந்த சோனியா காந்தி.. போராட்ட களத்தில் குதிக்க திட்டமா?

15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. போக்சோ நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments