மீண்டும் 2 நாட்களுக்கு மழை - வானிலை ஆய்வு மையம்

புதன், 15 நவம்பர் 2017 (13:58 IST)
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்னும் 2 நாட்களுக்கு மிதமான பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 

 
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது முதல் தமிழகம் முழுவதும் இரண்டு வாரங்களுக்கு மழை வெளுத்து வாங்கியது. சென்னையில் பெய்த கனமழையால் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வங்கக்கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் கூறியதாவது:-
 
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வெகு தொலைவில் உள்ளதால் தமிழகத்தில் பெரிதாக மழை பெய்ய வாய்ப்பில்லை. இதனால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை.சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறியுள்ளார்.
 
மேலும் தமிழகத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 7 செ.மீ மழை பெய்துள்ளது என்றும் தெரிவித்தார். கடந்த இரண்டு நாட்களாக லேசான சாரல் மழை மட்டுமே பெய்து வந்த நிலையில் இன்று சென்னையில் வானம் தெளிவாகி வெயில் எட்டி பார்த்துள்ளது.

எல்லாம் காட்டு

5 தொகுதி இடைத்தேர்தல்!.. குழப்பத்தில் அதிமுக!. ஸ்கெட்ச் போடும் திமுக!....

அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு..!

ஒருவழியாக தமிழகத்திற்கு டிஜிபி நியமனம்.. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.. யார் இவர்?

திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அவலம்.. 2023ல் கட்டப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து..!

என் குழந்தை கலைந்து போனதுக்கு விஜய் சார்தான் காரணம்!.. பிக்பாஸ் ஜூலி அழுகை!...

அடுத்த கட்டுரையில்
Show comments