Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுனரோடு விரோதம் இல்லை.. இதுதான் காரணம்? – முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

Written By Prasanth Karthick
Updated: திங்கள், 18 ஏப்ரல் 2022 (12:31 IST)
ஆளுனர் நடத்திய தேநீர் விருந்தில் கலந்து கொள்ளாதது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 14ம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று ஆளுனர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் நீட் விலக்கு மசோதாவை கிடப்பில் போட்டுள்ளதை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணித்தன.

இந்நிலையில் இதுகுறித்து இன்று சட்டமன்ற கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ”நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்முடிவு கிண்டி ஆளுனர் மாளிகையில் 210 நாட்களாக முடங்கி கிடக்கிறது. ஆளுனருடன் தனிப்பட்ட முறையில் எங்களுக்கு எந்த விரோதமும் இல்லை. எனக்கு கிடைக்கக்கூடிய பாராட்டை விட தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நன்மை, பலனே முக்கியமானது. நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காதது தமிழக மக்களை அவமதிக்கும் செயல்” என கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

இன்று சட்டசபையில் ஒரு வார்த்தை கூட பேசாத உதயநிதி!.. என்னாச்சி?...

விவசாயிகளை வாழ வைக்கும் முதல்வர் விஜய்.. இது எதிர்க்கட்சிகளுக்கு புரியவில்லை: செங்கோட்டையன்

தவெக அரசை வைத்து காங்கிரஸ் நடத்தும் நாடகம் தான் Delimitation.. தயாநிதி மாறன் எக்ஸ் பதிவு..

அறங்காவலர்களை தேர்வு செய்யும் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி!.. தமிழக அரசு அறிவிப்பு..

மத்திய அரசு இணையதளத்தில் ரக்சிதா போட்டோ!.. ஒரே அக்கப்போரு!....

அடுத்த கட்டுரையில்
Show comments