வெளியூர் செல்லும் மக்கள்; இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் இயங்கும்!

புதன், 13 அக்டோபர் 2021 (11:00 IST)
நாளை முதல் தொடர் விடுமுறை காரணமாக மக்கள் பலர் வெளியூர் செல்வதால் இன்று இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் ஆயுத பூஜை, விஜயதசமி என தொடர் விடுமுறைகள் இருப்பதால் மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் சென்னையில் 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இந்நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில்கள் இன்று மட்டும் இரவு 12 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மக்கள் மெட்ரோ சேவையை பயன்படுத்துவார்கள் என்பதால் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எல்லாம் காட்டு

நாங்க ஆட்சியை கவுக்க மாட்டோம்!.. பயப்பட வேண்டாம்!.. தவெகவுக்கு திருமா அட்வைஸ்!..

நாங்கெல்லாம் விஜய்க்குதான் ஓட்டு போட்டோம்!.. ஆனா!.. டாஸ்மாக் ஊழியர்கள் புலம்பல்!...

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்.எல்.ஏக்கள்!.. தவெக போடும் கணக்கு!...

6 மாசம் கம்முன்னு இருப்போம்னு சொல்லிட்டு இப்ப ஏன் கத்துறீங்க!.. செங்கோட்டையன் பேட்டி!..

தமிழகம் போலவே மேற்குவங்கத்திலும்... பள்ளி, கல்லூரி, கோவில்களுக்கு அருகே மதுக்கடைகள் தடை.. முதல்வர் சுவேந்து அதிகாரி அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments