கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி தலைவர் அடித்துக் கொலை!

Written By Sugapriya Prakash
Updated: புதன், 3 ஆகஸ்ட் 2022 (15:05 IST)
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே ஊராட்சி தலைவர் நரசிம்மமூர்த்தியை நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அடித்துக் கொலை செய்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா தளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது தாரவேந்திரம் ஊராட்சி. இந்த ஊராட்சியின் தலைவராக பிபி பாளையத்தை சேர்ந்த நரசிம்மமூர்த்தி இருந்து வந்தார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தளி பகுதி கமிட்டி உறுப்பினராக இருந்து வந்தார்.

இந்நிலையில், அவர் நேற்று இரவு (ஆக. 02) அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து, போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது, நேற்று இரவு நரசிம்மமூர்த்தி தளியிலிருந்து தனது ஊருக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். தனது ஊரான பிபி பாளையம் அருகே அவர் வந்தபோது அவரைப் பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் கட்டையால் அவரை வழிமறித்து தாக்கி உள்ளனர். இதில் நரசிம்மமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தளி காவல்துறை ஆய்வாளர் (பொறுப்பு) சம்பூர்ணம் தலைமையிலான காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட நரசிம்மமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் வழக்குப் பதிவு செய்து ஊராட்சி தலைவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்திவரும் போலீசார், கொலை செய்துவிட்டு தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.

எல்லாம் காட்டு

உறுதி அளித்தால் உண்ணாவிரதத்தைக் கைவிடத் தயாராக இருக்கிறேன்- சோனம் வாங்சுக்

ஜெயில் ஜாலியா இருக்கு!.. விரைவில் ஆட்சி மாறும்!. மார்க்கண்டேயன் பேட்டி!...

ஈரானுக்கு எதிரான போரில் 3.6 லட்சம் கோடி செலவு!.. அமெரிக்கா அறிவிப்பு..

இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ள அசத்தல் போட்டி.. வெற்றி பெற்றால் ரூ.75,000 பரிசு...

தமிழகத்துக்கு வரும் ராஜேஷ் லக்கானி!. செந்தில் பாலாஜிக்கு சிக்கல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments