மரணம் அடைந்த ஜெயக்குமார் கடிதம் எழுதி வைத்திருந்தாரா? தங்கபாலு விளக்கம்

Mahendran
சனி, 4 மே 2024 (15:41 IST)
நெல்லை மாவட்ட காங்கிரஸ் முக்கிய நிர்வாகி ஜெயக்குமார் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ள நிலையில்  அவர் கடிதம் எழுதி வைத்திருந்ததாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில் ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் தனது பெயர் இடம்பெற்றிருப்பது குறித்து தங்கபாலு விளக்கம் அளித்துள்ளார். ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் கடிதம் குறித்து காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும் அது உண்மையான கடிதம் தானா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
இந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் கட்சிக்காக பல லட்சங்களை செலவு செய்ததற்காக, அரசு ஒப்பந்தங்களை பெற்று தருவதாக காங்., எம்.எல்.ஏ. ஒருவர் வாக்குறுதி கொடுத்ததாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மேலும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் பல லட்சங்களை செலவு செய்ததாக கடிதத்தில் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவரின் புகாருக்கே, திமுக ஆட்சியில் இதுதான் நிலைமை என்றால், சாமானிய பொதுமக்கள் எதிர்கொள்ளும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்த கேள்வி பலமாக எழுகிறது’ என சந்தேகம் எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

மீண்டும் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை மசோதா.. இந்த முறை திமுக ஆதரவு தருமா?

ஒரு தரங்கெட்ட ஊடகவியலாளரை சந்திக்க ஸ்டாலின் எப்படி ஒப்புக்கொண்டார்.. திமுக இதனால் தான் தோற்றது..

ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் ரூ.18,600 கோடி முதலீடு.. எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்...!

ரேபிடோவில் சென்ற ஐடி பெண் ஊழியர் கார் மோதி மரணம்!.. சென்னையில் அதிர்ச்சி...

இரவோடு இரவோடு மூடப்பட்ட ஐடி கம்பெனி!.. 700 பேருக்கு வேலை போச்சி!...

அடுத்த கட்டுரையில்
Show comments