Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.வி.சேகரின் ஜெயில் ஆசையை அதிமுக நிறைவேற்றும்! – ஜெயக்குமார் எச்சரிக்கை!

Written By Prasanth Karthick
Updated: புதன், 12 ஆகஸ்ட் 2020 (13:41 IST)
எஸ்.வி.சேகர் சிறைக்கு செல்ல ஆசைப்பட்டால் அதிமுக அவரது ஆசையை நிறைவேற்றும் என அமைச்சர் ஜெயக்குமார் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்ட பாஜக பிரமுகர் எஸ்.வி.சேகர் தேசிய கொடி குறித்தும், தமிழக முதல்வர் குறித்தும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. கூட்டம் ஒன்றில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி “எஸ்.வி.சேகர் வழக்கு தொடர்ந்தால் ஓடி ஒளிந்து கொள்வார்” என பேசியிருந்த நிலையில், முதல்வர் குறித்து எஸ்.வி.சேகர் அவதூறாக பேசியதாக சென்னை குற்றவியல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒருமுறை இவ்வாறாக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு எஸ்.வி.சேகர் தலைமறைவான நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார் “எஸ்.வி.சேகர் தேசிய கொடியை அவமதித்ததும், முதல்வர் குறித்து அவதூறாக பேசியதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. எஸ்.வி.சேகர் நீண்ட காலமாக சிறை செல்ல ஆசைப்படுகிறார். அவரது ஆசையை அதிமுக நிறைவேற்றும்” என கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

11 கோடி விழுந்த லாட்டரியை குப்பையில் வீசிய பெண்!.. அவசரப்பட்டீங்களே ஆண்ட்டி!...

சரக்கு ஆன்லைன் சேல்ஸ் இல்ல!.. புக்கிங் மட்டும்தான்!.. அமைச்சர் விளக்கம்!..

ஏஐ மூலம் வெள்ளம் வருவதை எச்சரிக்கும் தொழில்நுட்பம்.. கேரள அரசு முடிவு..

நாடு முழுவதும் சுற்றுப்பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் திப்கே அறிவிப்பு..

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் சட்ட மசோதா.. மக்களவையில் நிறைவேற்றம்...

அடுத்த கட்டுரையில்
Show comments