Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இபிஎஸ் கடிதத்தை சபாநாயகர் மதிக்கனும் - ஜெயகுமார் பேட்டி!

Written By Sugapriya Prakash
Updated: திங்கள், 17 அக்டோபர் 2022 (16:56 IST)
இபிஎஸ் கடிதத்திற்கு சபாநாயகர் மதிப்பளிக்க வேண்டும் என இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு ஜெயகுமார் பேட்டி.

 
இன்று நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில் எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமரக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

ஆனால் சட்டசபையில் இருக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி இருக்கை அருகில் எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையிலேயே ஓபிஎஸ் அமர்ந்துள்ளார். அவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோரும் பேரவை கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதிமுக சார்பாக எங்களது ஜனாநாயகக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டோம். கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன் சபாநாயகரை சந்தித்து பேசினோம். சட்டமன்றமே எங்களை அங்கீரித்தது பாசிட்டிவாக பார்க்கிறேன் என ஓ.பன்னீர் செல்வம் சட்டசபை முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இந்நிலையில் இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜெயகுமார், இபிஎஸ் கடிதத்திற்கு சபாநாயகர் மதிப்பளிக்க வேண்டும். இபிஎஸ் கடிதத்தை மதித்து உரிமை வழங்க வேண்டிய கடமை சபாநாயகருக்கு உள்ளது. ஓபிஎஸ் தரப்புன்னா 4 பேர்தான், இபிஎஸ் தலைமைல தான் அதிமுக இருக்கு. இபிஎஸ் தரப்பில் தான் அதிக உறுப்பினர்கள் உள்ளனர் என  தெரிவித்துள்ளார்.
 
Edited By: Sugapriya Prakash

எல்லாம் காட்டு

13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயருகிறதா? விரைவில் அறிவிப்பு என தகவல்...!

விசாகன் ஐஏஎஸ் மற்றும் ரத்தீஷ் தலைமறைவா? தேடுதல் வேட்டையில் லஞ்ச ஒழிப்புத்துறை...

நாளை தவெக அரசின் முதல் பட்ஜெட்.. என்னென்ன முக்கிய அம்சங்கள் இருக்கலாம்?

தமிழகத்திற்கு வந்தது காவிரி தண்ணீர்.. பொதுமக்கள், விவசாயிகள் தலைவணங்கி வரவேற்பு..

தமிழ்நாட்டில் பைக் டாக்சிக்கு அனுமதி இல்லை!.. தமிழக அரசு அதிரடி...

அடுத்த கட்டுரையில்
Show comments