Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இபிஎஸ் கடிதத்தை சபாநாயகர் மதிக்கனும் - ஜெயகுமார் பேட்டி!

Written By Sugapriya Prakash
Updated: திங்கள், 17 அக்டோபர் 2022 (16:56 IST)
இபிஎஸ் கடிதத்திற்கு சபாநாயகர் மதிப்பளிக்க வேண்டும் என இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு ஜெயகுமார் பேட்டி.

 
இன்று நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில் எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமரக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

ஆனால் சட்டசபையில் இருக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி இருக்கை அருகில் எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையிலேயே ஓபிஎஸ் அமர்ந்துள்ளார். அவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோரும் பேரவை கூட்டத்தில் பங்கேற்றனர்.

அதிமுக சார்பாக எங்களது ஜனாநாயகக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டோம். கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன் சபாநாயகரை சந்தித்து பேசினோம். சட்டமன்றமே எங்களை அங்கீரித்தது பாசிட்டிவாக பார்க்கிறேன் என ஓ.பன்னீர் செல்வம் சட்டசபை முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

இந்நிலையில் இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஜெயகுமார், இபிஎஸ் கடிதத்திற்கு சபாநாயகர் மதிப்பளிக்க வேண்டும். இபிஎஸ் கடிதத்தை மதித்து உரிமை வழங்க வேண்டிய கடமை சபாநாயகருக்கு உள்ளது. ஓபிஎஸ் தரப்புன்னா 4 பேர்தான், இபிஎஸ் தலைமைல தான் அதிமுக இருக்கு. இபிஎஸ் தரப்பில் தான் அதிக உறுப்பினர்கள் உள்ளனர் என  தெரிவித்துள்ளார்.
 
Edited By: Sugapriya Prakash

எல்லாம் காட்டு

இண்டர்நெட் இல்லாமலே UPI-ல் பணம் அனுப்பலாம்!.. PhonePe புது ஆப் வந்தாச்சு!...

நேபாள வெள்ளம்!.. 8 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட 50 கோடி தங்கம்!...

இவரை பார்த்து கத்துக்கோங்க!.. சௌமியா அன்புமணிக்க்கு சட்டசபையில் கிடைத்த பாராட்டு!..

துயரத்திலும் மோசடி!.. நேபாள மக்களுக்கு உதவுவதாக போலி QR Code!.. மக்களே உஷார்!...

பாட்டிலுக்கு ரூ.10!.. நாங்க பண்ணா ஊழல்.. நீங்க பண்ணா நியாயமா?!.. சட்டசபையில் கே.என்.நேரு!..

அடுத்த கட்டுரையில்
Show comments