ஈரோடு கிழக்குத் தொகுதியில் 40 ஆயிரம் போலி வாக்காளர்கள்: ஜெயக்குமார்

வியாழன், 2 பிப்ரவரி 2023 (13:10 IST)
ஈரோடு கிழக்கு தொகுதியில் 40000 போலி வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளுமே வேட்பாளரை அறிவித்துவிட்டன. பாஜகவின் நிலை என்ன என்பது குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வருகிறது. 
 
இந்த நிலையில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர் பட்டியலில் குளறுபடி ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 
 
மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் 40000 போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. ஜெயக்குமாரின் இந்த குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் என்ன பதில் அளிக்கப்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

பாட்டிலை உள்ள போட்டா காசு வரும்!. பாட்டிலுக்கு 10 ரூபா சிக்கலுக்கு தீர்வு!..

அமெரிக்க-ஈரான் அமைதி ஒப்பந்தம் எதிரொலி... இந்திய பங்குச் சந்தையில் மாபெரும் எழுச்சி!

6 முதல் 8-ஆம் வகுப்பு வரை முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம்: செப்டம்பர் 17-ல் தொடக்கம்!

மெட்ரோ வசம் செல்லும் பறக்கும் ரயில்: ரூ.4,500 கோடியில் சென்னை கடற்கரை - பரங்கிமலை வழித்தடம் அதிரடி மாற்றம்!

4 கோடி காரில் சென்று பாத்திரம் கழுவும் வேலை செய்யும் சீன பெண்!. இணையத்தில் வைரல்..

அடுத்த கட்டுரையில்
Show comments