Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டை காலி செய்ய சொன்னதால் ஆத்திரம்! – ஹவுஸ் ஓனர் வீட்டை எரித்த ஆசாமி!

Written By Prasanth Karthick
Updated: வியாழன், 15 அக்டோபர் 2020 (12:11 IST)
தூத்துக்குடியில் வீட்டை காலி செய்ய சொன்ன ஹவுஸ் ஓனர் மீது ஆத்திரத்தில் அவரது வீட்டை ஆசாமி கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி தெற்கு கார்டன் ரோட்டில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான பல வீடுகள் உள்ளன. அந்த வீடுகளுக்கு அருகேயே நடராஜன் தன் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். நடராஜனின் வீட்டில் மரிய அந்தோணி என்பவர் குடியிருந்து வந்துள்ளார். அந்தோணி அடிக்கடி குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்வதால் அவரை வீட்டை காலி பண்ணி அனுப்பியுள்ளார் நடராஜன்.

இதனால் நடராஜன் மீது ஆத்திரத்தில் இருந்த மரிய அந்தோணி இரவு மது அருந்தி விட்டு வந்து நடராஜன் வீட்டிற்கு முன்னாள் நின்றிருந்த பைக்குகளுக்கு தீ வைத்து விட்டு தப்பியுள்ளார். தீ வேகமாக பரவியதில் அங்கிருந்த 9 பைக்குகள் எரிந்து சாம்பலான நிலையில் நடராஜன் வீட்டிற்குள்ளும் தீ பற்றியதால் உள்ளே உறங்கி கொண்டிருந்த அவர் மகன் அண்ணாமலை தீ பற்றி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். நடராஜன் தீ காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் மரிய அந்தோணியை தேடி வருகின்றனர். மொட்டை மாடியில் படுத்துறங்கியதால் நடராஜனின் மனைவி மற்றொரு மகன் உயிர் பிழைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

அதிமுகவின் இன்னொரு விக்கெட் காலி.. தவெகவில் இணைந்தார் வடசென்னை ராஜேஷ்...

பல ஆண்டுகளாக ரூ.8.77 கோடி வாடகை கொடுக்கமால் டிமிக்கி கொடுத்த நிறுவனம்.. 2 மாதத்தில் வசூல் செய்த தவெக அரசு..

அரசு அதிகாரிகளின் பணி உயர்வு விவகாரம்.. முதல்வர் விஜய் நேரடி ஒப்புதல் தேவை.. அதிரடி உத்தரவு..

ஜியோவின் 365 நாட்கள் திட்டம்.. 912 ஜிபி-க்கும் அதிகமான டேட்டா.. அன்லிமிடெட் அழைப்புகள்..

பிரிஜ் பூஷன் சரண் சிங் விடுதலை.. ஒட்டுமொத்த சிஸ்டமும் அவரை காப்பாற்றிவிட்டது.. வினேஷ் போகத் அதிருப்தி..

அடுத்த கட்டுரையில்
Show comments