பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் ஆர்ப்பாட்டம்!

J.Durai
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (15:01 IST)
இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,மாநிலம் தழுவிய  ஆர்ப்பாட்டம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. 
 
இதன் ஒரு பகுதியாக  இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் கோவை மாநகர் சார்பாக செஞ்சிலுவை சங்கம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
 
ஒருங்கிணைந்த கோவை மாவட்ட ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கம் மாவட்ட தலைவர்  விக்னேஷ் தலைமையில் நடைபெற்ற இதில், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ் கோட்ட  செயலாளர் பாபா கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து  சிறப்புரையாற்றினர்..
ஆர்ப்பாட்டத்தில்,
 
ஓலா ஹீப்பர் போன்ற
போன்ற வாகனங்களால் ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது,
எனவே அவைகளை முறைப்படுத்த வேண்டும்.
 
ஆட்டோ டிரைவர்களின் FCக்கு ஆந்திராவில் வழங்குவது போல் பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
 
ஆட்டோ தொழிலாளர்கள் இறந்து போனால்  அவரது  குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
 
ஆட்டோ ஓட்டுநர்கள் மீது பல பொய் வழக்குகள் போடப்படுவதால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் அந்த நிலையை உடனே காவல்துறை கைவிட வேண்டும் உள்ளிட்ட 
பல்வேறு  கோரிக்கைகள்  வலியுறுத்தப்பட்டது.
 

எல்லாம் காட்டு

இன்று இரவு வானில் ஒரு அரிய காட்சி.. புளூ மூனை காணத்தவறாதீர்கள்...

5 வருடங்களாக துரைமுருகன் பூட்டி வைத்திருந்த எம்.எல்.ஏ அலுவலம்.. இன்று சுறுசுறுப்பாக புத்தம் புது பொலிவுடன்.. இதுதாண்டா மாற்றம்..

8 பேரை சரமாரியாக வெட்டிய 6 பேர் கும்பல்.. 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் அரெஸ்ட்.. ட்ரோன் தொழில்நுட்பம்.. துப்பாக்கி சூடு.. போலீஸ் அதிரடி...

அடிக்கடி வந்து சோதனை செய்வேன்: அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த பத்திரப்பதிவு துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்

திருவள்ளுவரின் காவி உடை.. நடிகை கஸ்தூரியின் சாட்டையடி பதிவு:

அடுத்த கட்டுரையில்
Show comments