Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் அதிகபட்ச மழை பொழிவு எங்கு தெரியுமா?

Written By Sugapriya Prakash
Updated: வெள்ளி, 1 அக்டோபர் 2021 (12:49 IST)
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மணமேல்குடியில் 19 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகமான மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மணமேல்குடியில் 19 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. மேலும் சிவகங்கை, மதுரை புலிப்பட்டியில் தலா 12 செ.மீ., திருச்சி, வாத்தலை, பொன்னமராவதி, நத்தத்தில் 11 செ.மீ. மழை பொழிந்துள்ளது.  
 
அதோடு ஈரோடு, பவானி, கொடுமுடி, காமாட்சிபுரத்தில் 10 செ.மீ., புதுக்கோட்டை, பெரம்பலூர், ஆலங்குடியில் 9 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எல்லாம் காட்டு

நிலாவில் ஆராய்ச்சி தளம்!.. இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா!..

சொத்து வரி ஏறிப்போச்சி!.. தேர்தலில் ஊதியது விசில் இல்ல!.. சங்கு!.. அப்துல்லா விமர்சனம்!...

எம்.ஜி.ஆர் சொன்னார். எங்க தலைவர் செஞ்சிட்டார்!. பன்ச் பேசிய மரிய வில்சன்!...

சட்டசபை நாலு நாளைக்கு லீவு!.. மீண்டும் 17ம் தேதி மானிய கோரிக்கை விவாதம்!...

குறைந்தவிலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான்களை நீக்கிய AIRTEL!.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..

அடுத்த கட்டுரையில்
Show comments