8 மாவட்டங்களுக்கு காத்திருக்கு செம மழை! – வானிலை ஆய்வு மையம்!

Written By Prasanth Karthick
Updated: ஞாயிறு, 19 ஜூலை 2020 (13:37 IST)
தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட சில பகுதிகள் மழை பெய்து வரும் நிலையில் மேலும் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முதல் பல பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்துள்ளது.

இந்நிலையில் அடுத்த 24 மனி நேரத்தில் தமிழக கடற்கரையோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நீலகிரி, வேலூர், கோயம்புத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டம்ங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் சேலம் ஆகிய பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எல்லாம் காட்டு

3வது முறையாக ஜனநாயகன் படம் பார்க்கும் விஜய்!.. அப்படி என்ன ஃபீலிங்!..

ஜனநாயகன் இன்று ரிலீஸ்!.. வெறிச்சோடிய தலைமை செயலகம்!...

அழகிரி மகள் கயல்விழி கோரிக்கை விஜய்யால் நிராகரிப்பு.. தவெகவில் சேரும் திட்டம் கேன்சலா?

ரோஹிணி தியேட்டர்ல்ல எதுக்கு நீட் போராட்டம் பண்ணனும்.. திமுகவுக்கு அரசியல் செய்ய வேற எதுவுமே கிடைக்கலையா?

சாதகமான நீதிமன்ற தீர்ப்பு.. 16 ஆண்டுகளுக்கு பின் நாடு திரும்பும் லலித் மோடி...

அடுத்த கட்டுரையில்
Show comments