வட மாவட்டங்களில் ஓய்ந்தது மழை.. தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை..!

Written By Siva
Updated: செவ்வாய், 12 டிசம்பர் 2023 (14:05 IST)
சென்னை உள்பட வட மாவட்டங்களில் கன மழை பெய்து ஓய்ந்து உள்ள நிலையில் தற்போது தென் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இன்று திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய நான்கு தென் மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தென்கிழக்கு அரபி கடல் பகுதியில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதால் மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. 
 
அதேபோல் நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் மிதமான மழை பெய்யும் என்றும் 15, 16, 17 ஆகிய தேதிகளில் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

நீட் தேர்வு போராட்டம்!.. நள்ளிரவில் பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ!...

போராட்டத்திற்கு ஆதரவான வீடியோவை நீக்குங்கள்.. மாணவர்களுக்கு சென்னை ஐஐடி உத்தரவா?

26 நாட்களுக்கு பின்னர் உண்ணாவிரத்தை முடித்துக்கொண்ட சோனம் வாங்சுக்!...

மீண்டும் 60 நாடுகளுக்கு வரி போட்ட டிரம்ப்.. இந்தியாவுக்கு எத்தனை சதவீதம்?

போராட்டம் திசைதிரும்புவதால் உண்ணாவிரதத்தை முடித்தார் வாங்சுக்.. ஆனால் காங்கிரசும் திமுகவும் போராட்டத்தை கைவிடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments