Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெருங்கும் புதிய புயல்; துறைமுகங்களில் இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு!

Written By Prasanth Karthick
Updated: வெள்ளி, 3 டிசம்பர் 2021 (16:41 IST)
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற உள்ள நிலையில் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையாக கடந்த மாதம் முதலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்க கடலில் தற்போது புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு மண்டலமாக மாறியுள்ள நிலையில் அடுத்த 12 மணி நேரத்திற்குள் புயலாக உருமாற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை, கடலூர், காட்டுப்பள்ளி, எண்ணூர், புதுச்சேரி, காரைக்கால், நாகை, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த புயல் ஆந்திரா, ஒடிசா இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

யுடியூப்பில் சமையல் கற்று மாசம் ரூ.25 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்!.. வீடியோ உள்ளே...

இல்லாத தொழிற்சாலையை மூட கோரிக்கை விடுத்தாரா எம்.எல்.ஏ.. அமைச்சர் கீர்த்தனா விளக்கம்...

100-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் போலி செயலிகள் மூலம் கட்டணம்.. அமலாக்கத்துறை கண்டுபிடிப்பு...

ஒரே டூவிலரில் சென்ற 4 மாணவிகள் பேருந்து மோதி பலி.. முதல்வர் விஜய் இரங்கல் மற்றும் நிதியுதவி...

கஜானா காலி!. விஜய்க்கு தூக்கம் வரல!.. தூய்மை பணியார்களிடம் பேசிய அமைச்சர்கள்!...

அடுத்த கட்டுரையில்
Show comments