பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலை… நல்ல முடிவை ஆளுநர் எடுப்பார் – முதல்வர் நம்பிக்கை!

வியாழன், 4 பிப்ரவரி 2021 (16:50 IST)
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை ஒட்டி தமிழக ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலடைக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக பலர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானம் ஆளுனரின் ஒப்புதலுக்காக அளிக்கப்பட்டது.

ஆளுனர் ஒப்புதல் தாமதமாகி வந்த நிலையில் ஆளுனர் இந்த விவகாரத்தில் உடனடி முடிவு எடுக்க உச்ச நீதிமன்றம் கடந்த 21ம் தேதி அறிவுறுத்தியிருந்தது. இந்நிலையில் ஆளுனர் தரப்பில் மத்திய அரசுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது.

இன்று நடைபெற்ற ஆளுனர் உரை மீதான விவாதத்தின் போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ‘எழுவர் விடுதலை குறித்து முதல்வர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது’ எனக் கூறியுள்ளார். 

எல்லாம் காட்டு

வீட்டிற்கே வந்து முடிவெட்டும் ஸ்டார்ட் அப் நிறுவனம் Yes Madam.. ரூ.195 கோடி வருவாய் ஈட்டி சாதனை..!

மொபைல் வாலட் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி: புதிய கட்டுப்பாடுகளை விதித்தது ரிசர்வ் வங்கி!

தி.நகர் உள்பட சென்னையின் முக்கிய பகுதிகளில் இன்று மின் தடை.. மின்வாரியத்தின் முக்கிய அறிவிப்பு..!

அதிமுகவின் 4வது விக்கெட் காலி.. வேலுமணி ஆதரவாளர் எம்.எல்.ஏ பதவி ராஜினாமாவா?

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தவெக அரசின் ஆரம்பக்கட்ட சறுக்கலா?

அடுத்த கட்டுரையில்
Show comments