நாளை முதல் வழக்கம் போல ரயில்கள் இயங்கும்: மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

வெள்ளி, 3 மார்ச் 2023 (20:04 IST)
நாளை காலை முதல் மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது 
 
இன்று காலை திடீரென சென்னை மெட்ரோ ரயில் பாதையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆங்காங்கே மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்பட்டன. சில ரயில்கள் சுரங்க பாதையில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெறும் அவதிக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியது.
 
 இந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யும் வகையில் சென்னை விமான நிலையம் முதல் சென்ட்ரல் வரையிலான மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. 
 
இந்த நிலையில் தற்போது மெட்ரோ ரயில் தொழில்நுட்ப கோளாறு இரவு பகலாக சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றும் இரவுக்குள் கோளாறு செய்யப்பட்டு நாளை காலை முதல் வழக்கம் போல் ரயில்கள் இயங்கும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளத்.
 
சென்னையின் வரப்பிரசாதமாக கருதப்படும் மெட்ரோ ரயில் ஒருநாள் இயங்கவில்லை என்பதால் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

எல்லாம் காட்டு

இனப்பெருக்கத்தில் இருந்த சிங்கங்கள்!. அருகில் சென்ற வாலிபர் மரணம்!...

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை: மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி

காவிரி நீரை உடனே பெறுக; இல்லையேல் காங்கிரஸ் அமைச்சர்களை நீக்குக: இபிஎஸ் அதிரடி சவால்

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு கட்டாயம்: முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு

இனிமே விஜய்தான் தலைவர்!.. தவெகவுக்கு தாவும் திமுகவினர்!.. அதிர்ச்சியில் அறிவாலயம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments