கள்ளக்குறிச்சி விவகாரம்..! விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி..!!

Senthil Velan
வியாழன், 20 ஜூன் 2024 (12:23 IST)
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 35 பேர் உயிரிழந்தது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணையை தொடங்கி உள்ளனர்.
 
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் குடித்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு  வாந்தி, மயக்கம், தலைவலி மற்றும் வயிறு எரிச்சலால் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, விழுப்புரம் அரசு மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இவர்களில் சிகிச்சை பலனின்றி  35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மருத்துவமனைகளில் 91 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே விஷச் சாராய விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் வடக்கு மண்டல ஐ.ஜி. நரேந்திரன் நாயர் ஆய்வு செய்து வருகிறார். கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் சிபிசிஐடி ஐ.ஜி. அன்பு ஆய்வு மேற்கொண்டுள்ளார். 
 
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக விசாரணை அதிகாரி கோமதி தலைமையிலான சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி எஸ்.பி. வினோத் சாந்தாராம் மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்னர். 

ALSO READ: கள்ளச்சாராய மரணம்.! விசாரணை ஆணையம் அமைப்பு..! மெத்தனால் குறித்து விசாரிக்க முதல்வர் உத்தரவு..!!
 
மரணம் விளைவித்தல், விஷத்தையோ அல்லது மயக்கமடையச் செய்யும் போதைப்பொருளையோ விற்றல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. விசாரணைக்கு பிறகு கூடுதல் பிரிவுகள் சேர்க்கப்பட உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

1,068.54 ஹெக்டேர் இரயில்வே நிலங்கள் ஆக்கிரமிப்பு.. சுமார் 42 நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானங்களுக்கு சமம்... எப்படி மீட்க போகிறார்கள்..

AI அறிவு இருந்தால் மட்டுமே வேலை.. ரூல்ஸை மாத்திய HCLTech.. லட்சக்கணக்கில் சம்பளம்...

நம்ம பிரதமர் மோடி இருக்கிறார்.. தவெக ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது: ஆர்பி உதயகுமார்

சுமார் 4.6 லட்சம் தங்க மோதிரம் வாங்க டெண்டர்.. தாய்மாமன் தங்க மோதிர திட்டம்...

பழனி கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்து முறைகேடு.. சார்பதிவாளர் சஸ்பெண்ட்..

அடுத்த கட்டுரையில்
Show comments