Webdunia - Bharat's app for daily news and videos

Install App

25 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது. திங்கள் முதல் பட்டாசு ஆலைகள் இயங்கும்

Updated: சனி, 20 ஜனவரி 2018 (05:45 IST)
சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும், பட்டாசு உற்பத்தி தடை குறித்த வழக்கை சுப்ரீம் கோர்ட் விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகாசியில் பட்டாசு ஆலைகள் கடந்த 25 நாட்களாக மூடப்பட்டு தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த உறுதியை ஏற்று தற்போது வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் வேலைநிறுத்தம் முடிவுக்கு வருவதோடு வரும் திங்கள் முதல் வழக்கம் போல் பட்டாசு ஆலைகள் இயங்கவுள்ளது.

மேலும் தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த அனைத்து வணிகர் சங்கங்கள், பொதுமக்கள் ஆகியோர்களுக்கு பட்டாசு ஆலை உரிமையாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் தங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும், பட்டாசு ஆலைகளை காக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும் என தாங்கள் நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
 

எல்லாம் காட்டு

யுடியூப்பில் சமையல் கற்று மாசம் ரூ.25 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்!.. வீடியோ உள்ளே...

இல்லாத தொழிற்சாலையை மூட கோரிக்கை விடுத்தாரா எம்.எல்.ஏ.. அமைச்சர் கீர்த்தனா விளக்கம்...

100-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் போலி செயலிகள் மூலம் கட்டணம்.. அமலாக்கத்துறை கண்டுபிடிப்பு...

ஒரே டூவிலரில் சென்ற 4 மாணவிகள் பேருந்து மோதி பலி.. முதல்வர் விஜய் இரங்கல் மற்றும் நிதியுதவி...

கஜானா காலி!. விஜய்க்கு தூக்கம் வரல!.. தூய்மை பணியார்களிடம் பேசிய அமைச்சர்கள்!...

அடுத்த கட்டுரையில்
Show comments