விபத்துக்குள்ளான தாதர்- புதுச்சேரி விரைவு ரயில் நாளை ரத்து!

சனி, 16 ஏப்ரல் 2022 (11:51 IST)
ரயில் பெட்டிகள் தடம் புரண்டதையடுத்து தாதர்- புதுச்சேரி விரைவு ரயில் (11005) நாளை ரத்து. 

 
மும்பையின் தாதர் ரெயில் நிலையத்திலிருந்து நேற்று இரவு புறப்பட்ட புதுச்சேரி விரைவு ரயில், மாட்டுங்கா ரெயில் நிலையம் அருகே விபத்துக்குள்ளானது. ஆம், ரயிலில் இருந்த 3 பெட்டிகள் தடம் புரண்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 
 
இந்த விபத்தில் யாரும் காயம் அடையவில்லை என்றும்,  அனைத்து பயணிகளும் அவர்களது உடமைகளும் பாதுகாப்பாக உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டதையடுத்து தாதர்- புதுச்சேரி விரைவு ரயில் (11005) நாளை ரத்து செய்யப்பட்டது. விபத்துக்குள்ளான தாதர்- புதுச்சேரி விரைவு ரயிலை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன என தெற்கு ரயில்வே தெரிவித்தது.  

எல்லாம் காட்டு

சனாதானம் கண்டிப்பாக தேவை!.. நடிகர் அர்ஜூன் பேட்டி!...

தவெகவில் இணையும் சி.வி. சண்முகம்?!.. அதிர்ச்சியில் அதிமுக!..

கடைகளை திறக்காத டாஸ்மாக் ஊழியர்கள்!.. தனியார் பார்களில் குவியும் மதுப்பிரியர்கள்!..

டெல்லியில் திருவள்ளுவர் சிலையை திறந்துவைக்காமல் சென்னை திரும்பிய விஜய்!..

விஜய் பற்றிய செய்தி!.. 46ம் இடத்திற்கு தள்ளப்பட்ட புதிய தலைமுறை!.. பின்னணியில் யார்?..

அடுத்த கட்டுரையில்
Show comments