வெற்றியை கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

வியாழன், 2 மார்ச் 2023 (12:55 IST)
ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் வெற்றி பெறும் நிலையில் இருக்கும்போது வெற்றியை கொண்டாடும் நிலையில் நான் இல்லை என அவர் பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்த அவர் மேலும் கூறிய போது ’முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதால் தான் இந்த வெற்றி கிடைத்துள்ளது என்றும் ஈரோட்டில் நிறைவேற்ற வேண்டிய பணிகளை எனது மகன் விட்டுச் சென்ற நிலையில் அந்த பணிகளை நிறைவேற்ற எனக்கு ஈரோடு மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளதால் ஈரோடு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்று பாடுபடுவேன் என்றும் தெரிவித்தார். 
 
நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரை தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெறும் என்றும் இந்த தேர்தலை முடிவு அதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்றும் தெரிவித்தார். 
 
மேலும் தேர்தல் வெற்றிக்கு பாடுபட்ட கனிமொழி உதயநிதி கமல்ஹாசன் உள்ளிட்டவருக்கு எனது நன்றி என்றும் தேர்தல் ஆணையம் சரியாக செயல்படுகிறது என்றும் இந்த வெற்றி மிகப்பெரிய என்றாலும் இந்த வெற்றியை கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

நர்ஸ் மாணவி உயிரிழந்த சம்பவம்.. சென்னையில் இருந்து விரைகிறது மருத்துவர் குழு.. அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை..!

சென்னையில் அடிக்கடி மின் தடை ஏன்? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்..!

கோவை சிறுமி கொலை வழக்கு: 24 மணி நேரத்திற்குள் 2 குற்றவாளிகள் கைது.. மின்னல் வேக நடவடிக்கை..!

அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க வேண்டும்.. தமிழக அரசிடம் அனுமதி கேட்ட அமலாக்கத்துறை...

ட்விட்டரில் மின்வெட்டு புகார் அளித்தவர்கள் அவசர அவசரமாக ட்வீட்டை டெலிட் செய்துவிட்டு ஓட்டம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments