Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றியை கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி

Written By Mahendran
Updated: வியாழன், 2 மார்ச் 2023 (12:56 IST)
ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் வெற்றி பெறும் நிலையில் இருக்கும்போது வெற்றியை கொண்டாடும் நிலையில் நான் இல்லை என அவர் பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்த அவர் மேலும் கூறிய போது ’முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதால் தான் இந்த வெற்றி கிடைத்துள்ளது என்றும் ஈரோட்டில் நிறைவேற்ற வேண்டிய பணிகளை எனது மகன் விட்டுச் சென்ற நிலையில் அந்த பணிகளை நிறைவேற்ற எனக்கு ஈரோடு மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளதால் ஈரோடு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்று பாடுபடுவேன் என்றும் தெரிவித்தார். 
 
நாடாளுமன்ற தேர்தலை பொருத்தவரை தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியை வெற்றி பெறும் என்றும் இந்த தேர்தலை முடிவு அதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்றும் தெரிவித்தார். 
 
மேலும் தேர்தல் வெற்றிக்கு பாடுபட்ட கனிமொழி உதயநிதி கமல்ஹாசன் உள்ளிட்டவருக்கு எனது நன்றி என்றும் தேர்தல் ஆணையம் சரியாக செயல்படுகிறது என்றும் இந்த வெற்றி மிகப்பெரிய என்றாலும் இந்த வெற்றியை கொண்டாடும் மனநிலையில் நான் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

மராத்தி தெரியாவிட்டால் ஆட்டோ ஓட்ட முடியாது.. அரசின் விதிமுறையால் மும்பை ஆட்டோ டிரைவர்கள் அதிர்ச்சி...

9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச டேப்லெட்கள்.. புதுவை முதல்வர் அதிரடி அறிவிப்பு..

முக்கியமான நாட்களில் சட்டப்பேரவையில் உதயநிதி இல்லை.. அதிருப்தியில் திமுக எம்.எல்.ஏக்கள்?

நயினார் நாகேந்திரனை ஏன் கைது செய்யவில்லை?!.. அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்!..

நான் சொன்ன எதையும் நீங்க கேட்கல!.. முக ஸ்டாலினிடம் கோபப்பட்ட சபரீசன்?!..

அடுத்த கட்டுரையில்
Show comments