Webdunia - Bharat's app for daily news and videos

Install App

TNPSC காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..!

Written By Mahendran
Updated: புதன், 7 ஜூன் 2023 (12:39 IST)
TNPSC காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: 
 
2022ம் ஆண்டு சுமார் 10 ஆயிரம் தொகுதி-4 காலிப்பணியிடங்களுக்காக, நடைபெற்ற TNPSC தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 2023ல் வெளியானது. ஆனால் இதுவரை கலந்தாய்வு நடைபெறவில்லை.
 
இந்நிலையில்,TNPSC தொகுதி -4க்கான காலிப்பணியிடங்கள் தற்போது 25000மாக உயர்ந்திருப்பதாக செய்திகள் வருகின்றன, எனவே 2022ம் ஆண்டு தொகுதி -4க்காக நடைபெற்ற TNPSC தேர்விலிருந்தே சுமார் 20 ஆயிரம் தகுதி பெற்ற தேர்வாளர்களையாவது தேர்ந்தெடுத்து அனைவருக்கும் கலந்தாய்வை நடத்தி, அரசு துறைகளில் காலியாக உள்ள 20000 பணியிடங்களையாவது உடனடியாக நிரப்பிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
 
TNPSC தொகுதி -4க்கான பணியிடங்கள் நிரப்பப்படாததால் அரசின் அனைத்து துறைகளின் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது , இதனால் மக்கள் பல்வேறு வகைகளில் அவதிக்கு உள்ளாகிறார்கள் , ஆகவே விரைந்து தொகுதி -4க்காண காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என விடியா அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

கரப்பான் பூச்சி கட்சியில் பிளவு!.. புது கட்சியை திறந்த மனிஷ் பிரம்மாட்!..

இது நடந்தாத்தான் விஜய் பிரதமராக முடியும்!.. டி.கே.எஸ் இளங்கோவன் நக்கல்!...

விஐபி வருகைக்காக சைக்கிளில் சென்றவர் தள்ளிவிடப்பட்ட சம்பவம்.. கொந்தளித்த நெட்டிசன்கள்..

வீட்டுவேலை செய்யும் மனைவிக்கு மாத சம்பளம் வழங்கும் கணவர்.. நெட்டிசன்களின் ரியாக்சன்...

4 கிலோ அரசி கேட்ட பாட்டிக்கு வருஷம் முழுக்க அரசி!.. தவெகவினர் சம்பவம்...

அடுத்த கட்டுரையில்
Show comments