Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் பேருந்தில் உயிரிழந்த டிரைவர்.. உயிர்தப்பிய பயணிகள்

Updated: வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (13:53 IST)
ஓடும் பேருந்தில் மாரடைப்பு ஏற்பட்டதால் டிரைவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தனியிலிருந்து அரக்கோணத்திற்கு சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தை தேவதாஸ் என்னும் 50 வயது முதியவர் ஓட்டிக்கொண்டிருந்தார். அந்த பேருந்தில் 40 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் திடீரென டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதனால் சில விநாடிகள் தாறுமாறாக பேருந்து ஓடியது. பேருந்தை ஒரு வழியாக கட்டுக்குள் கொண்டுவந்த டிரைவர் தேவதாஸ் பேருந்தை பிரேக் அடித்து நிறுத்தி மயங்கி விழுந்தார்.

பின்பு பேருந்து பயணிகள் உடனடியாக டிரைவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தேவதாஸ் இறந்துவிட்டதாக கூறினர். தான் உயிரிழக்கும் நிலையிலும் 40 பேரின் உயிரை காப்பாற்றிய டிரைவரின் செயல், பெரும் பரிதாபத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

11 கோடி விழுந்த லாட்டரியை குப்பையில் வீசிய பெண்!.. அவசரப்பட்டீங்களே ஆண்ட்டி!...

சரக்கு ஆன்லைன் சேல்ஸ் இல்ல!.. புக்கிங் மட்டும்தான்!.. அமைச்சர் விளக்கம்!..

ஏஐ மூலம் வெள்ளம் வருவதை எச்சரிக்கும் தொழில்நுட்பம்.. கேரள அரசு முடிவு..

நாடு முழுவதும் சுற்றுப்பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் திப்கே அறிவிப்பு..

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் சட்ட மசோதா.. மக்களவையில் நிறைவேற்றம்...

அடுத்த கட்டுரையில்
Show comments