அரக்கோணம் தொகுதி திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு கொரோனா தொற்று உறுதி!

வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (20:14 IST)
திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு கொரோனா தொற்று உறுதி!
கொரோனா வைரஸால் தமிழகத்தில் மட்டும் தினமும் 5 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் இந்தியாவில் 70 ஆயிரம் பேர்களுக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் உலகம் முழுவதும் சுமார் இரண்டரை கோடி மக்களை பாதித்துள்ள கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்க மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் 
 
இந்த நிலையில் தமிழகத்தை பொருத்தவரை பொதுமக்கள் மட்டுமன்றி மக்கள் பிரதிநிதிகளையும் கொரோனா வைரஸ் விட்டுவைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
கொரோனா வைரஸ்க்கு கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமார் மற்றும் திமுக ஜெ அன்பழகன் ஆகியோர் பலியாகி உள்ளனர் என்பதும் 25க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் எம்பிக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அரக்கோணம் தொகுதி திமுக எம்பி ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு கொரோனா உறுதியாக இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் அவர்களுக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா  உறுதியாகி உள்ளதாக தெரிகிறது இதனால் திமுக தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

எல்லாம் காட்டு

தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டம் ஆரம்பிப்பது எப்போது? கரூரில் முதல்வர் விஜய் அறிவிப்பு..!

இனி தமிழகத்தின் நிரந்தர முதல்வர் விஜய் தான்.. கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு...

பணமா? ஜனமா? தில்லா சொல்றேன் கெத்தா சொல்றேன்.. என் ஜனம் தான் டா எனக்கு முக்கியம்.. ஆவேசமாக பேசிய முதலமைச்சர் விஜய்

பணமா? ஜனமா? என்றால் எனக்கு ஜனமே முக்கியம்!. கரூரில் விஜய் ஆவேசம்...

கரூர் போலீஸ் எங்களை அலார்ட் பண்ணவில்லை!.. முதல்வர் விஜய் குற்றச்சாட்டு!..

அடுத்த கட்டுரையில்
Show comments