Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோக்கனுக்கு அடுத்து பேனர் வைக்கிறாங்க! – அறிவுறுத்தலை மீறி நீதிமன்றம் செல்லும் திமுக!

Written By Prasanth Karthick
Updated: செவ்வாய், 5 ஜனவரி 2021 (12:05 IST)
தமிழகத்தில் பொங்கல் தொகுப்பு டோக்கனில் கட்சி தலைவர்கள் புகைப்படம் அச்சிட தடை விதிக்கப்பட்ட நிலையில் பேனர் வைக்கப்படுவதாக திமுக மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கலுக்கு அரசு சார்பில் பொங்கல் பையும், பணமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு பொங்கல் பைக்கான டோக்கனில் அதிமுக தலைவர்கள் படங்கள் அச்சிட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக திமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதுகுறித்த விசாரணையில் டோக்கன்களில் கட்சி தலைவர்கள் படம் இடம்பெறகூடாது என நீதிமன்றம் தெரிவித்த நிலையில், உணவு வழங்கல் துறை வழங்கும் டோக்கன்களில் தலைவர்கள் படம் அச்சிடப்படவில்லை என்றும், கட்சியினர் விநியோகித்த டோக்கன் செல்லாது என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்தது. மேலும் கட்சிரீதியான பிரச்சினைகளுக்காக அடிக்கடி நீதிமன்றத்தை நாட வேண்டாம் என திமுகவிற்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது பொங்கல் பை வழங்கும் அங்காடிகளில் அதிமுக விளம்பர பேனர்கள் வைப்பதாக குற்றச்சாட்டு வைத்துள்ளது திமுக. இதுகுறித்து வழக்கு தொடர அனுமதி வேண்டி நீதிமன்றத்தை திமுக நாடியுள்ளது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

ஜியோவின் 365 நாட்கள் திட்டம்.. 912 ஜிபி-க்கும் அதிகமான டேட்டா.. அன்லிமிடெட் அழைப்புகள்..

பிரிஜ் பூஷன் சரண் சிங் விடுதலை.. ஒட்டுமொத்த சிஸ்டமும் அவரை காப்பாற்றிவிட்டது.. வினேஷ் போகத் அதிருப்தி..

அரசியல்கட்சி துவங்கமாட்டோம்!.. அது வேஸ்ட்!.. CJP நிறுவனர் அபிஜீத் திப்கே பேட்டி!..

முதல்வர் விஜய் கடவுளின் குழந்தையா?!.. பைத்தியக்காரங்களா!.. சீமான் கோபம்!.

இந்தியா வளருதுன்னா ஏன் துபாய்ல இருக்கீங்க?!.. மாதவனை வெளுத்த ராஜ் தாக்கரே!..

அடுத்த கட்டுரையில்
Show comments