7 பேர் விடுதலை விவகாரத்தில் பாஜக - காங்கிரஸ் ஒத்த கருத்து: அற்புதம்மாள் குற்றச்சாட்டு

ஞாயிறு, 30 டிசம்பர் 2018 (19:10 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் வாடும் நளினி, முருகன், பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று நீதிமன்றம் கூறிவிட்ட நிலையில் இதுகுறித்து தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றி கவர்னருக்கு அனுப்பியுள்ளது.

இந்த தீர்மானம் அனுப்பப்பட்டு 100 நாட்கள் ஆகிய பின்னரும் இதுகுறித்து கவர்னர் இன்னும் முடிவெடுக்காமல உள்ளனர். மேலும் ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்யும் விஷயத்தில் மட்டும் காங்கிரஸ் மற்றும் பாஜக ஒரே கருத்தில் இருப்பதாக தெரிகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய அற்புதம்மாள், மற்ற விவகாரங்களில் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் பாஜக - காங்கிரஸ் 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஒத்த கருத்தோடு அரசியல் செய்வதாகவும் 'ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

எல்லாம் காட்டு

முதல்வர் பதவியேற்பு விழாவில் 3 பேர் மிஸ்ஸிங்!. எனக்கு வருத்தம்!.. சமுத்திரக்கனி ஃபீலிங்!..

பயிர்க்கடன் மிகப்பெரிய ஏமாற்றம்!.. தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்!.. விவசாயிகள் சங்கம் அறிவிப்பு..

பயிர்க்கடன் தள்ளுபடி ஒரு பெரிய ஸ்கேம்!.. இன்னும் எவ்ளோ ஏமாத்துவீங்க?.. உதயநிதி காட்டம்!...

மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ ராஜினாமா!.. எடப்பாடி பழனிச்சாமி ஷாக்!.. தமிழக அரசியலில் பரபரப்பு..

இன்று முதல் டாஸ்மாக் கடைகளை திறக்கமாட்டோம்!.. ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு...

அடுத்த கட்டுரையில்
Show comments