ஓடும் பேருந்தில் இருந்து இருக்கையுடன் நடத்துநர் கீழே விழுந்த விவகாரம்: 3 பேர் சஸ்பெண்ட்

Siva
வியாழன், 25 ஏப்ரல் 2024 (15:58 IST)
நேற்று அரசு பேருந்தில் இருந்து நடத்துநர் இருக்கையுடன் கீழே விழுந்த விவகாரத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் உள்பட மூன்று பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
நேற்று திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கேகே நகருக்கு சென்ற அரசு பேருந்தில் அமர்ந்திருந்த நடத்துநர் திடீரென பேருந்து வளைந்த போது இருக்கையுடன் கீழே விழுந்தார். இந்த விபத்தில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது 
 
இந்த நிலையில் இது குறித்த புகைப்படம் வெளியாகிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் அரசு பேருந்துகளின் தரம் எந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டு காட்டியது
 
இந்த நிலையில் இது குறித்து விசாரணை செய்த போக்குவரத்துக் கழகம், அரசு போக்குவரத்து கழக தீரன் நகர் கிளை மேலாளர் ராஜசேகர் உள்பட 3 பேரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

லஞ்சம் வாங்கல!.. அரசு பேருந்து கட்டணத்திலேயே ஆம்னி பேருந்து!. போடு!...

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவன்!. காதலுடனோடு சேர்து போட்டு தள்ளிய மனைவி!..

ஒரு இட்லி ஒரு தோசை சாப்பிட்டு 12 ஆயிரம் பில்லு கொடுக்குறேன்!.. திருமா வேதனை!...

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் தண்டனை.. புதிய மசோதா தாக்கல்?

பழனி கோவில் நில விவகாரம்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளருக்கு முன்ஜாமீன்...!

அடுத்த கட்டுரையில்
Show comments