Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் இணைந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் – தமிழிசை டிவிட்டரில் அறிவிப்பு !

Updated: திங்கள், 1 ஜூலை 2019 (10:33 IST)
கிருஷ்ணகிரி மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் 100 பேர் தமிழிசை முன்பு பாஜக வில் நேற்று இணைந்தனர்.

தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் பலவீனமடைந்து வருகின்றன. தலைமை முதல் களப்பணியாளர்கள் வரை நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸை தோல்வியடையச் செய்வதற்காக கம்யூனிஸ்டுகள் பாஜகவை மறைமுகமாக ஆதரித்ததாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியைக் கிளப்பின.

அதைப்போல தமிழகத்திலும் ஒரு அதிசயக்கதக்க நிகழ்வு நடந்துள்ளது. தமிழகத்தின் கிருஷணகிரி மாவட்டத்தின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கமலாலயத்தில் தமிழிசை முன்பு பாஜகவில் இணைந்தனர். இதனை தமிழிசை சவுந்தர்ராஜன் தனது டிவிட்டரில் அறிவித்தார்.

வழக்கமாக கம்யூனிஸ்ட் கட்சிகளில் இருந்து விலகுபவர்கள் மற்றொரு கம்யூனிஸ்ட் கட்சிக்குதான் செல்வது வழக்கம். ஆனால் அனைவரையும் ஆச்சர்யப்படவைக்கும் விதமாக பாஜகவில் இணைந்துள்ள சம்பவம் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.

எல்லாம் காட்டு

நயினார் நாகேந்திரனின் சர்ச்சைக்குரிய பேச்சு.. கம்யூனிஸ்ட் தலைவர் பெ சண்முகம் கண்டனம்..

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர்.. முழு விவரங்கள்...!

முன்னாடியெல்லாம் டிவியில நாடகம் பார்ப்போம்.. இப்ப சட்டசபையை பார்க்கிறோம்.. தவெக எம்.எல்.ஏவிடம் தெரிவித்த பெண்கள்..

எம்.எல்.ஏக்களுக்கு அரசு வாகனம், எரிபொருள் மற்றும் ஓட்டுநர் படி.. தமிழ்நாடு அரசு திட்டம்...

11 வகை மதுபானங்கள் மீது தடை விதித்தது யார்? தடையை அடுத்த நாளே நீக்கியது யார்? ரெண்டுமே மத்திய அரசு...

அடுத்த கட்டுரையில்
Show comments