Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக ஆட்சியில் ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிட்டது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Written By Siva
Updated: புதன், 1 நவம்பர் 2023 (11:54 IST)
பாஜக ஆட்சியில் ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிட்டது என்றும், வரும்  நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் இந்தியா கூட்டணிக்கு சிறப்பான வெற்றியை வழங்க வேண்டும் என்றும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டபோது பேசினார். அவர் மேலும் கூறியதாவது:
 
தனக்கு எதிராக யார் எந்த கருத்தை சொன்னாலும் அவர்களை பாஜக அரசு மிரட்டுகிறது எனவும், தேர்தல் நெருங்குவதால் பாஜகவிற்கு  தோல்வி பயம் வந்துவிட்டது எனவும், ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா? மக்களாட்சி நீடிக்குமா? என்ற நிலையில் தான் சூழல் உள்ளது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
 
மேலும் IT, ED ரெய்டைத் தொடர்ந்து தொலைபேசியை ஹேக் செய்யும் முயற்சியையும் பாஜக கையாண்டுள்ளது எனவும், இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனமே எச்சரிக்கை கடிதத்தை எதிர்கட்சியினருக்கு வழங்கி உள்ளது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

கருணாநிதி நின்னுருந்தாலும் தோக்கடிச்சிருப்பேன்!.. வி.எஸ்.பாபு பேட்டி...

எம்பிக்களுக்கு அலுவலகம் கட்டி தாருங்கள்.. முதல்வர் விஜய்யிடம் கோரிக்கை வைத்த ஜோதிமணி எம்பி..

நண்பனை நரபலி கொடுத்த நபர்.. தலையை வெட்டி வீட்டில் பூஜை செய்த கொடூரம்!...

காங்கிரஸ் இல்லையென்றால் விஜய் முதல்வராகியிருக்க முடியாது: மாணிக்கம் தாகூர்..

கட்சிக்காக 5 பேரை தேர்வு செய்து கொடுத்த தனுஷ்?!.. விரைவில் தேர்தல் ஆணையத்தில் பதிவு!..

அடுத்த கட்டுரையில்